a-r-rahman | ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் பதிப்புரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்ததை அடுத்து, பொன்னியின் செல்வன் பகுதி-2 பாடலான 'வீர ராஜா வீரா'வின் மூலப் பதிவை வெளியிடுமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிச.1) உத்தரவிட்டது.
பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் வீரா ராஜ வீர… சூரா தீர சூர… வீழா சோழ வீர… சீரார் ஞாலம் வாழ… வாராய் வாகை சூட… என்ற பாடல் வெளியாகி இருந்தது.
இந்தப் பாடல் பதிப்புரிமை சிக்கலை சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் பதிப்புரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்ச்சைக்கு காரணமான பாடல்களைக் கேட்ட நீதிபதி பிரதீபா எம் சிங், "தாளத்தில் நிச்சயமாக ஒருவித ஒற்றுமை உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“