/tamil-ie/media/media_files/uploads/2022/01/dhanush-aishwarya.jpg)
பிரிவதில் உறுதியாக இருக்கிறோம்
தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ மனமில்லாமல் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்கள் மூலமாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அதில் 2004ஆம் ஆண்டு நடந்த தங்களது திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு மூன்று முறை விசாரணைக்கு வந்த நிலையில் இரண்டு முறையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால், இருவரும் மீண்டும் சேரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் நான்காவது முறையாக இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் நேரில் ஆஜராகினர். இருவரிடமும் நீதிமன்ற அறைக்குள் வைத்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த வழக்கில் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.