Dhanush and Aishwarya Rajinikanth | Dhanush and Aishwarya Rajinikanth Decided to Call Off Divorce : 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா, பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழக்கையில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவர்களுக்காக இல்லை என்றாலும் இவர்களின் குழந்தைகளுக்காக மட்டுமாவது சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. அதே சமயம் திரையுலகை சேர்ந்த பலரும் இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையேயான விவாகரத்து மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ரஜினி மற்றும் தனுஷ் தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், மற்றும் நானே வருவேன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர், கேப்டன் மில்லர் மற்றும் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.