கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த நடிகர் தனுஷ் தற்போது தனது மகனின் பள்ளி விழாவில் ஐஸ்வர்யாவுடன் இணைந்து பங்கேற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகி வரும் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் திடீரென தனது மனைவி ஐஸ்வர்ய ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபலங்கள் பலரும் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஆனால் அதன்பிறகு தனுஷ் தனது பட வேளைகளில் பிஸியான நிலையில், இயக்குனராக ஐஸ்வர்ய ரஜினிகாந்த் தனது ஆல்படம் பாடல் வேலைகளில் களமிறங்கினார். வேலை தொடர்பாக இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கிய நிகழ்வும் அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து தனுஷ் தனது மகன்களுடன் தனியாக அமெரிக்கா சென்ற நிலையில், ஐஸ்வர்ய அவ்வப்போது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இதனிடையே தற்போது இவர்களின் மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் யாத்ராவுக்கு 'ஸ்போர்ட்ஸ் கேப்டன்' பட்டம் வழங்கப்பட்ட படத்தைப் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து்ளளார்.
இந்த படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், பிரிந்த இருவரும் சேர்ந்து விட்டார்களா அல்லது பள்ளி நிகழ்ச்சிகாக வந்துள்ளார்களா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதில் ஒரு சில ரசிகர்கள் இவரும சேர்ந்தால் நல்லது என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“