/tamil-ie/media/media_files/uploads/2022/01/dhanush-aishwarya.jpg)
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாகத் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
“நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையை தொடரவுள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்துகொள்ளும் நேரம் இது!
எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
அதே போல ஒரு பதிவை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து பெற்றோர்கள் ஒப்புதலுடன் 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.