Advertisment

தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்கள்? தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா சூசக தகவல்

நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸவர்யா ரஜினிகாந்த் 18 ஆண்டுகள் திருமண வாழக்கைக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் மனம் ஒத்து பிரிந்து செல்வதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

author-image
WebDesk
New Update
Dhanush, Aishwaryaa Rajinikanth, dhanush news, dhanush divorce, Aishwarya Rajinikanth, dhanush family, தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்கள், தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா சூசக தகவல், dhanush wife Aishwaryaa, Dhanush Aishwaryaa Rajinikanth to call off divorce, Dhanush's father Kasthuri Raja reacts

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 19 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு, மனம் ஒத்து பிரிவதாக ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டனர். தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியிலும் திரைத் துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

தனுஷ் - ஐஸ்வர்யா வெளியிட்ட அறிக்கையில், “நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.

இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.. தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம்.

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்” என்று இருவரும் கூரியிருந்தனர்.

தனுஷ் - ஐஸவர்யா இருவரும் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே ஐஸ்வர்யாவின் தந்தை நடிகர் ரஜினிகாந்த் சமாதானம் பேசி, இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியதாகவும் அதை இருவரும் ஏற்றுக்கொண்டு மீண்டும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரும் இனிமேல் விவாகரத்தை நோக்கி செல்லமாட்டோம் என்று ரஜினியிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா, தனுஷ் - ஐஸ்வர்யா இடையே அப்படியொரு சண்டை ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். கஸ்தூரி ராஜா, சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், இந்த பிரச்சினையில் இருந்து விலகி இருப்பதாகவும் தனது மகன்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளில் தலையிடவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ இல்லை என்று கூறினார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையேயான சமரசம் குறித்த சில செய்திகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ​​எனக்குத் தெரியாது என்று கஸ்தூரி ராஜா கூறினார்.

“எங்கள் பிள்ளைகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் நானும் என் மனைவியும் நன்றாக வாழ முடியும். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு. வேறொன்றுமில்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கும் எதுவும் எங்களுக்கும் பிரச்சனைதான். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி” என்று கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி பள்ளி நிகழ்ச்சியில், தங்கள் மகன் யாத்ராவுக்காக பெற்றோர்களாக கலந்துகொண்டு பொதுவெளியில் தோன்றினர். இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், இந்த நிகழ்வில் இருவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rajinikanth Dhanush Aishwarya Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment