/indian-express-tamil/media/media_files/SiQOSErmlUNADdzfX6Kx.jpg)
தனுஷ் தனது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் நிரூபித்துள்ள நடிகர் தனுஷ் தான் 3-வதாக இயக்க உள்ள படம் குறித்து நாளை மறுநாள் அறிவிப்பதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில், நடிகர் தயாரிப்பாளர், இயக்குனர் பாடகர் என பன்முக திறமை கொண்ட தனுஷ், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராஜ்கிரன், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ், வேலையில்லா பட்டதாரி 2, மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியிருந்தார்.
தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50-வது படமாக சன்பிச்சர்ஸ் தயாரிப்பில் தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். தற்காலிகமாக டி50 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் மற்றும் முக்கிய விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
#DD3pic.twitter.com/IgXDIDReca
— Dhanush (@dhanushkraja) December 22, 2023
இதனிடையே தனுஷ் தனது இயக்கத்தின் 3-வதாக தயாராக உள்ள படத்தின் கான்செப்ட் போஸ்டரை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பு வரும் டிசம்பர் 24 (நாளை மறுநாள்) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 அரைநிலா அதன்பிறகு 3 இடம் பெற்றுள்ள இந்த போஸ்டரில் கடற்கரையில் ஒரு பெஞ்ச் மட்டும் காட்டப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இந்த படம் காதல் கதையை அடிப்படையாக கொண்டதா இருக்கலாம். இந்த அறிவிப்பு டிசம்பர் 24 2023 என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அவரே தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.