/indian-express-tamil/media/media_files/FTrNMaIpVvK7njeZhDEf.jpg)
கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை நடிகர் தனிஷ் வழங்கி உள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புஞ்சரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் மண்ணில் புதைத்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் இதுவரை 418 பேர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவமும், பேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், வரை ஆறுதல்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடியாக நடிகர் தனுஷ் வழங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.