Advertisment

போயஸ் கார்டனில் வீடு வாங்கியது குறித்து தனுஷ் சொன்ன கதை; ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

நடிகர் தனுஷ் சமீபத்தில் போயஸ் கார்டனில் வீடு வாங்கியது பற்றி பேசினார். அங்கே வீடு வாங்க தன்னைத் தூண்டிய அவரது ஆரம்ப காலத்தின் கதையைப் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhanush Sons

நடிகர் தனுஷ் தான் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தான் போயஸ் கார்டனில் வீடு வாங்கியது குறித்துப் பேசினார். (Image: Sun Pictures/Facebook)

சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் தனுஷ் வீடு, கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் அங்கு கிரகப் பிரவேசம் நடத்திவிட்டு அந்த வீட்டிற்கு குடிபுகுந்ததில் இருந்தே விவாதப் பொருளாக உள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ ஜெயலலிதா ஆகியோரின் குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Dhanush questions trolling over buying luxury home in Poes Garden: ‘Should a person born on the streets stay there?’

இதற்கிடையில், நடிகர் தனுஷ் சமீபத்தில் இதுபோன்ற ஆடம்பரமான வீடு வாங்கியது பற்றி பேசினார், போயஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டை வாங்க அவரைத் தூண்டிய அவரது ஆரம்ப கால தனிப்பட்ட கதையைப் பகிர்ந்து கொண்டார். “போயஸ் கார்டனில் வீடு வாங்குவது இவ்வளவு பெரிய விஷயமாக மாறியிருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், அதற்குப் பதிலாக ஒரு சிறிய அபார்ட்மெண்ட்டிலேயே இருந்திருப்பேன். என்னை மாதிரி ஆள் போயஸ் கார்டனில் வீடு வாங்க கூடாதா? தெருவில் பிறந்தவன் தன் வாழ்நாளின் இறுதி வரை அங்கேயே இருக்க வேண்டுமா” என்று தனுஷ் சமீபத்தில் தனது வரவிருக்கும் ராயன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக் கூட்டத்தில் பேசும்போது ஆச்சரியப்பட்டார்.

“போயஸ் கார்டனில் வீடு வாங்குவதற்குப் பின்னால் ஒரு சின்ன கதை இருக்கிறது. அப்போது எனக்கு 16 வயது, ஒரு நாள் பைக்கில் என் நண்பருடன் சுற்றித் திரிந்தபோது, ​​தலைவரின் (ரஜினிகாந்த்) வீட்டைப் பார்க்க ஆசைப்பட்டேன். வழியில் அங்கே இருந்தவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன், நாங்கள் அவரது இடத்தைக் கண்டுபிடித்தோம், அதை மகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டு வெளியேறினோம்” என்று தனுஷ் நினைவு கூர்ந்தார்.

“பைக்கில் திரும்பும் போது, ​​தலைவரின் வீடு இந்தப் பக்கம் இருந்தாலும், மறுபுறம் பெரும் கூட்டத்தைக் கண்டோம். என்ன கூட்டம் என்று கேட்டதற்கு, அது ஜெயலலிதாவின் வீடு என்று சொன்னார்கள். இரு வீடுகளையும் பார்த்தேன். அந்த நேரத்தில், என் மனதில் ஆசை தோன்றியது; போயஸ் கார்டனில் குறைந்த பட்சம் ஒரு சின்ன வீட்டையாவது சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.” என்று கூறினார்.

“அப்போது நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். துள்ளுவதோ இளமை (நடிகராக தனுஷின் அறிமுகத்தை குறிக்கும் மற்றும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவால் இயக்கப்பட்டது மற்றும் அவரது சகோதரர் செல்வராகவன் எழுதியது) வெற்றிபெறவில்லை என்றால், நாங்கள் தெருவில் வாழ வேண்டியிருக்கும். 20 வருடங்கள் உழைத்து போயஸ் கார்டனில் நான் வாங்கிய வீடு, அந்த 16 வயது இளைஞன் வெங்கடேஷ் பிரபுவுக்கு (அவரது இயற் பெயர்) தனுஷ் கொடுத்த பரிசு” என்று பேசி அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார்.

நெட்டிசன்கள் தனுஷை நெப்போட்டிசம் தயாரிப்பு என்று விமர்சிக்கின்றனர்.

நடிகர் தனுஷின் கருத்துக்கள் பலருக்கு பிடிக்கவில்லை, அவர்கள் அவரை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். அவர் போதுமான வசதி கொண்ட நெப்போட்டிசத்தின் தயாரிப்பு என்றும் அவரது கதை 'உத்வேகமாக' இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்கள்.

எக்ஸ் பக்கத்தில் ஒரு நெட்டிசன் எழுதியுள்ளார், “தனுஷின் இந்த புதிய முட்டாள்தனத்தை என்ன என்று சொல்வது? இந்த சம்பவம் தனக்கு 16 வயதில் நடந்ததாக அந்த பையன் கூறுகிறான். அப்போது அவர் வெளிநாட்டவரா? இல்லை.. அவருடைய தந்தை கவர்ச்சி இழந்த ஒரு பிரபல இயக்குனர். ஏன் இந்த நடிகர்கள் தாங்கள் ஏதோ ஒரு வழக்கத்திற்கு மாறானவர்கள் போல் நடிக்கிறார்கள்? எளிமையான உடை மற்றும் ருத்ராட்சம் அணிவதால் ஒருவர் எளிமையாகவும் அடக்கமாகவும் இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை. மனப்போக்குதான் முக்கியம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சிறந்த நடிகர் - திரையில் மற்றும் துரதிர்ஷ்டவசமாக திரைக்கு வெளியேயும் சிறந்த நடிகராக இருக்கிறார். நடிகர் தனுஷ் மீது அபரிமிதமான மரியாதை உள்ளது ஆனால் ஒரு நபராக அவருக்கான கணிசமான ஈர்ப்பை இழந்துவிட்டது ஏமாற்றம்” என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார். 

ஒரு எக்ஸ் பயனர் குறிப்பிடுகையில்,  “அவர் ஏன் வெளிநாட்டவரைப் போல் செயல்பட முயற்சிக்கிறார், அவரைப் பற்றி தமிழகம் முழுவதும் தெரியும்” என்று கூறினார்.

“ரசிகர்கள் குறிப்பாக குட்டி கதையுடன் கூடிய ஆடியோ வெளியீட்டு விழாக்களில் நடிகர்களின் வித்தைகளுக்கு கைதட்டுவதையும், விசிலடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதுல இடைவெளிவிட்டு இடைவெளி விட்டு பில்ட்அப் பண்ணி பேசுறது” என்று என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment