Advertisment

இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் : எப்போது வெளியீடு?

திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவில் மிகவும் பிரபலமானது.

author-image
WebDesk
New Update
Ilayaraj

இளையராஜா

 

Advertisment

இசைஞானி இளையராஜாவின் படைப்பில் திண்டுக்கல் பாதாள செம்பு முருகனுக்கு பாடல்கள் எழுதி இசையமைத்து சிறப்பிக்க உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் நாள்தோறும் வெளிநாடு, வெளி மாநிலம் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் கருங்காலி மாலைகள் அணிவித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பாதாள செம்பு முருகன் திருக்கோயிலுக்காக அரோகரா பிலிம்ஸ் வழங்கும் பாடல் வெளியிடப்படுகிறது. கவிஞர், பாடலாசிரியர் இசைஞானி இளையராஜா வரிகளில் பாதாள செம்பு முருகனுக்கு ஐந்து பாடல்களும், தாய் வராகி அம்மனுக்கு இரண்டு பாடல்களும் என 7 பாடல்கள் தயாராகி உள்ளன. இந்த பாடல்களை  இசைஞானி இளையராஜா எழுதி இசையமைக்கின்றார்.

பாடல்களை பிரபல பாடகர்கள் குரலில் பதிவு செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளதாக பாதாள செம்பு முருகன் திருக்கோயில் நிர்வாகம்  தெரிவித்துள்ளது. முன்னதாக, கோயிலில் அனைவருக்கும் இலவச தரிசனம், திருக்கோவிலில் உண்டியல் இல்லை,  தட்டில் காணிக்கை கிடையாது , இலவச வாகன நிறுத்தம், இலவச குளிக்குமிடம்  அனைத்தும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ilayaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment