/indian-express-tamil/media/media_files/PH38ZhFqQyMAfQu9kNSO.jpg)
விஜய் - அட்லீ - ஷாருக்கான்
ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் காலடி வைத்த இயக்குனர் அட்லீ, முதல் படத்திலேயே 1000 கோடி வசூலில் சாதனை படைத்துள்ள நிலையில், அடுத்து பாக்ஸ் ஆபிஸில் ரூ 3000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் படத்தை உருவாக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ, தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய் நடிப்பில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். இதன் பிறகு பாலிவுட் சென்ற அவர், ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தை இயக்கியிருந்தார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
தமிழ் இயக்குனரின் முதல் படம் பாலிவுட் சினிமாவில் 4 இலக்கத்தில் வசூல் செய்துள்ளது. இது குறித்து பேசிய அட்லீ, அடுத்து பாக்ஸ் ஆபிஸில் ரூ 3000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் படத்தை உருவாக்க விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், தனது திரையுலகப் பயணம் குறித்துப் பேசிய இயக்குநர், விஜய் மற்றும் ஷாருக்கானை நம்பி, அவர்களை இயக்க வாய்ப்பளித்ததால் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்யும் ஷாருக்கானும் இணைந்து நடித்தால் 3000 கோடி வசூல் செய்யும் படம் உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.
'ஜவான்' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, பேசிய அட்லீ தமிழில் விஜய்யுடன் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக கூறியிருந்தார். மேலும் இந்த படத்தில் ஷாருக்கானும் நடிக்கலாம் என்றும் கூறிய அவர் இப்போது நான்கு மாதங்கள் ஓய்வில் இருக்கிறார். அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் நேரத்தை செலவிட்டு வரும் அட்லீ, அடுத்த ஆண்டுக்குள் புதிய படத்திற்கான ஸ்கிரிப்டைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஜவான்' படத்திற்குப் பிறகு, அட்லியின் பெயர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.,மேலும் அவருக்கு ஹாலிவுட்டில் கூட இயக்க வாய்ப்பு கிடைத்தது. அவரின் எதிர்கால திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.