/indian-express-tamil/media/media_files/2025/09/13/sakthivel-2025-09-13-15-51-15.jpg)
சிட்டிசன் - சாமுராய் ரெண்டும் ஒண்ணு தான், ஆனா நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்: பாலாஜி சக்திவேல் ஓபன் டாக்!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் பாலாஜி சக்திவேல். இவர் ‘சாமுராய்’, ‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது முழு நேர நடிகராக உள்ளார். சமீபத்தில் வெளியான சமீபத்தில் வெளியான ’டிஎன்ஏ’, ’குடும்பஸ்தன்’, ’பறந்து போ’ படங்களில் பாலாஜி சக்திவேல் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் நடிகர் கே.பி.ஒய் பாலா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ‘காந்தி கண்ணாடி’ என்பது நகைச்சுவை நடிகராக மட்டும் பார்க்கப்பட்ட பாலாவின் திறமையை, உணர்வுப்பூர்வமான கதையகத்தில் ஒரு நடிகராகவும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும் ஒரு முக்கிய படைப்பு எனலாம்.
’காந்தி கண்ணாடி’ திரைப்படத்தில் பாலாஜி சக்திவேலின் எதார்த்த நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. அதிலும், தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையை என்ற ஏக்கத்தில் அவர் இறந்து போகும் காட்சி திரையரங்குகளில் பலரையும் கண்ணீர் விட வைத்தது.
இந்நிலையில், விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமுராய்’ படம் குறித்து பாலாஜி சக்திவேல் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, ““நான் சிம்பிளான படம் எடுக்கலாம் என்று தான் வந்தேன். அப்பறம் ஆக்ஷன் படம் எடுக்கலாம் என்ற போது ‘சாமுராய்’ பட கதை எழுதினேன். முதலில் இந்த படத்தின் கதையை அஜித்திடம் சொன்னேன்.
நான் ‘சாமுராய்’ படத்தில் ஒரு சினிமாட்டிக் கிளைமேக்ஸ் கொடுத்தேன். அதே மாதிரி தான் ‘சிட்டிசன்’ படத்திலும் இருந்தது என்று எனக்கு தெரியாது. ‘சாமுராய்’ படத்தால் தான் ‘சிட்டிசன்’ படம் ஓடவில்லை என்று கிடையாது” என்றார்.
தனியார் தொலைக்காட்சியில் வெளியான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாலா பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். தற்போது 'காந்தி கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்குதல், அனகபுத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை தொடங்குதல் போன்ற பல சேவைகள் மூலம் சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.