தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் கே. பாலசந்தர் மனைவி ராஜம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கே. பாலசந்தர் மனைவி ராஜம்:
தமிழ் சினிமாவை வேறு தரத்திற்கு அழைத்து சென்ற இயக்குனர்களில் கேபி முதன்மையானவர். காலத்தினால் அழிக்க முடியாத இவரது படங்கள் இன்றும் காவியங்களாகவே போற்றப்படுகிறது. இவரின் மறைவுக்கு பின்பு இவர் இயக்கிய படங்கள் குறித்து பேசாத பிரபலங்களே இல்லை.
கேபிவின் மறைவுக்கு பின்பு அவரின் மனைவி ராஜம் மிகவும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84
அவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். ராஜமின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு மேல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே. பாலசந்தர் மனைவி ராஜம்
பாலசந்தரின் கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸுடன் நெருங்கிய தொடர்புடைய ரஜினி, கமல், விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் ராஜமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜமின் மறைவு செய்தி அறிந்த பிரபலங்கள் அவரின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.