தொழில்னு வந்துட்டா நான் தம்பினு பாக்க மாட்டேன்; இளையராஜா வைத்த செக்: பட‌ வாய்பை இழந்த கங்கை அமரன்!

தன் படத்திற்கு இளையராஜா எப்படி இசையமைத்தார் என்பது குறித்து இயக்குநர் கே.பாக்யராஜ் மனம் திறந்துள்ளார்.

தன் படத்திற்கு இளையராஜா எப்படி இசையமைத்தார் என்பது குறித்து இயக்குநர் கே.பாக்யராஜ் மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kangai

தொழில்னு வந்துட்டா நான் தம்பினு பாக்க மாட்டேன்; இளையராஜா வைத்த செக்: பட‌ வாய்பை இழந்த கங்கை அமரன்!

இயக்குநர் நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்ட கே. பாக்யராஜ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘16 வயதினிலே’ படத்தில் உதவியாளராக சினிமாத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார்.பாரதிராஜா  இயக்கிய 3-வது படமான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் பாக்யராஜ் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisment

 இந்த படத்திற்கு பாக்யராஜ் வசனமும் எழுதியிருந்தார். இதையடுத்து, ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜை வசன கர்த்தாவாக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் பாரதிராஜா அறிமுகம் செய்தார். இதையடுத்து  ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘மெளன கீதங்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘விடியும் வரை காத்திரு’, ‘அந்த ஏழு நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘சின்ன வீடு’ போன்ற பல்வேறு படங்களை இயக்கி கவனம் பெற்றார்.

பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் நடிகை ஊர்வசி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் போது இயக்குநர் பாக்யராஜ் தான் நடிகை ஊர்வசிக்கு புடவை கட்ட சொல்லிக் கொடுத்தார் என்று அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். 

பரிமளா என்ற குறும்புக்கார கிராமத்துப் பெண், கிராமத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் ஒரு விதவையைக் காதலிப்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்த படம். அவர் தன்னுடன் உடலுறவு கொண்டதாக பொய்யாகக் குற்றம் சாட்டி அவரை மணக்கிறார், ஆனால் அவரது காதலை வெல்ல அவள் என்ன செய்கிறாள் என்பதே படத்தின் கதை.

Advertisment
Advertisements

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படி பல புகழை பெற்ற இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சாதாரணமாக இசையமைத்துவிடவில்லை. இதுகுறித்து, இயக்குநர் பாக்யராஜ் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, "முந்தானை முடிச்சு படத்தின் இசையமைப்பு பணியை இளையராஜாவிடம் கொடுத்தோம். ஆனால் அவர் இசையமைக்க மறுத்துவிட்டார். முதலில் என்னிடம் கேட்கவில்லையே கங்கை அமரனிடம் தானே கேட்டீர்கள். அதனால் நான் பண்ணமாட்டேன் என்றார்.

உங்கள் தம்பியிடம் தானே கேட்டோம் என்று சொன்னதற்கு தொழில்னு வந்துட்டா தம்பி என்ன? அண்ணன் என்ன? என்றார். அதன் பிறகு ரொம்ப கெஞ்சி தான் அந்த படத்திற்கு இசையமைத்தார்” என்றார்.

Ilaiyaraja Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: