சூர்யா படத்தில் தூங்கும்போதும் மேக்கப் கலைக்க மறுத்த சரோஜா தேவி: வடிவேலு சொன்ன பன்ச் டயலாக்

நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையை, நடிகை சரோஜா தேவி பின்பற்றியது குறித்த ருசிகர தகவலை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அண்மையில் பகிர்ந்துள்ளார்.

நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையை, நடிகை சரோஜா தேவி பின்பற்றியது குறித்த ருசிகர தகவலை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அண்மையில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Saroja Devi & MGR

ஆதவன் திரைப்படத்தின் போது பழம்பெரும் நடிகை சரோஜா தேவியுடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் நினைவு கூர்ந்துள்ளார். 

Advertisment

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ப்ளாக்பஸ்டர் படங்களை இயக்கியவர் கே.எஸ். ரவிக்குமார். அதிக வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர்களின் பட்டியலில் முதன்மையானவராக வலம் வரும் இவர், அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, தான் இயக்கிய திரைப்படங்கள், அதில் பங்காற்றிய கலைஞர்கள் என தான் கடந்து வந்த பல்வேறு சுவாரசிய திரை அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், சூர்யா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் தான் இயக்கிய ஆதவன் திரைப்படம் குறித்து பல சம்பவங்களை அவர் தெரிவித்தார். அப்படத்தில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது, சரோஜா தேவியின் மேக்கப் சற்று அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய ரவிக்குமார், மேக்கப்பை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சரோஜா தேவி, எம்.ஜி.ஆர் தான் தன்னை இவ்வாறு மேக்கப் போட்டுக் கொள்ள அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட கே.எஸ். ரவிக்குமார், சரோஜாதேவியின் மேக்கப் குறித்த ஒரு வசனத்தை திரைப்படத்தில் இடம்பெறச்செய்துள்ளார். குறிப்பாக, ஒரு காட்சியில் தூங்கும் போது கூட சரோஜா தேவி மேக்கப்பில் தான் இருப்பார் என வடிவேலு ஒரு வசனம் கூறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த வசனத்தைக் கேட்ட நடிகர் சூர்யா படப்பிடிப்பு தளத்திலேயே சிரித்து விட்டார் என கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையை, சரோஜா தேவி கடைப்பிடித்தது குறித்து நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Advertisment
Advertisements

இதேபோல், நிஜ சம்பவங்களை திரைப்படத்தில் சரியான இடத்தில் இடம்பெறச் செய்து, பார்வையாளர்களின் கைத்தட்டல்களைப் பெற்றதால் தான், கே.எஸ். ரவிக்குமாரால் ரசிகர்களின் ரசனையை உணர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்ததாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Actor Suriya Tamil Cinema saroja devi Mgr Vadivelu Ks Ravikumar Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: