New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/01/a415.jpg)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகளான ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒப்பந்தம்
மணிரத்னம், இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். அவரது நீண்ட கால ஆசை 'கல்கி' எழுதிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக எடுக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் பட்ஜெட் மற்றும் நடிகர்கள் தேர்வு என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இருப்பினும், விக்ரம், சிம்புவை இப்படத்தில் நடிகை வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகளான ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரையும் மணிரத்னம் ஒப்பந்தம் செய்திருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.