ராதிகாவுக்கு முக்கியத்துவம், இதுல நான் எப்படி நடிக்கிறது? ஹிட் பட வாய்ப்பை மறுத்த கேப்டன்; மனோபாலா த்ரோபேக் சம்பவம்!

ஹிட் பட வாய்ப்பை நடிகர் விஜயகாந்த் மறுத்ததற்கான காரணம் குறித்து இயக்குநர் மனோபாலா மனம் திறந்துள்ளார்.

ஹிட் பட வாய்ப்பை நடிகர் விஜயகாந்த் மறுத்ததற்கான காரணம் குறித்து இயக்குநர் மனோபாலா மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
manobala

ராதிகாவுக்கு முக்கியத்துவம், இதுல நான் எப்படி நடிக்கிறது? ஹிட் பட வாய்ப்பை மறுத்த கேப்டன்; மனோபாலா த்ரோபேக் சம்பவம்!

இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட மனோ பாலா தமிழ் திரையுலகில் தனக்கான முத்திரையை பதித்தவர்.  மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் பாரதிராஜாவின் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

பின்னர், 1982-ஆம் ஆண்டு ’ஆகாய கங்கை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து, ‘சிறைப்பறவை’, ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஊர்க்காவலன்’, ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார்.

 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய மனோபாலா தமிழ் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் சூபர் ஹிட்டடித்த ’சதுரங்க வேட்டை’ திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். 

இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் ஹிட் பட வாய்ப்பை மறுத்தது குறித்து இயக்குநர் மனோபாலா பேசும் த்ரோபேக் வீடியோ வைரலாகி வருகிறது. அதில்,  “நடிகர் மோகனை வைத்து வில்லத்தனம் எல்லாம் பண்ண முடியாது என்று நான் விஜயகாந்த்தை நோக்கி சென்றேன். மணிவண்ணன் நடிகர் சத்யராஜை நோக்கி சென்றார். 

Advertisment
Advertisements

’சிறைப்பறவை’ என்பது பெண்ணை மையமாக வைத்து எழுதிய கதை. ராதிகாவிற்காக எழுதிய கதை. இதில் யாரும் நடிக்க வரவில்லை என்று நடிகர் விஜயகாந்திடம் கதை சொன்ன போது பெண்ணை மையமாக வைத்து எழுதிய கதையில் எப்படி நடிப்பது என்று கேட்டார். 

’என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ திரைப்படம் விஜயகாந்திற்காக பண்ணிய படம். ‘சிறைப்பறவை’  சூப்பர் ஹிட்டான பிறகு நாங்கள் குற்றாலம் சென்றோம். அப்போது சத்யா மூவிஸில் இருந்து கால் வந்தது. திரும்பி சென்னை வந்து பார்த்தால் ஒரு பக்கம் சத்யா மூவிஸில் இருந்து கூப்பிடுகிறார்கள். 

ஒரு பக்கம் கலைஞரின் பூம்புகர் புரொடக்‌ஷனில் இருந்து கூப்பிடுகிறார்கள். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அதன்பின்னர், கலைஞர் கருணாநிதியிடம் போய் ஆலோசனை கேட்ட போது அவர் சத்யா மூவிஸ் படத்தை பண்ண சொன்னார். அதை பண்ணினால் தான் நீ வாழ்க்கையில்  முன்னுக்கு வர முடியும் என்றார். 

அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்றால் ரஜினிகாந்த் படம் செய்ய வேண்டும் என்றார். ’அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினி சார் என் அறையில் தான் இருந்தார். நான் அவரிடம் உங்களை தேர்ந்தெடுத்து விட்டார்களா என்று கேட்கிறேன். அவர் கன்னடத்தில் தெரியவில்லை போனால் தான் தெரியும்” என கூறினார்.

Vijayakanth Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: