Advertisment

தமிழ் சினிமா உதவி இயக்குனர் மாரிமுத்து 30 வயதில் திடீர் மரணம்: மாரி செல்வராஜுடன் இணைந்து பணி செய்தவர்

கர்ணன் படத்தில் உதவி இயக்குனராக பணியை தொடங்கிய மாரிமுத்து அடுத்து மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Mari Selva

மாரி செல்வராஜ் - உதவி இயக்குனர் மாரிமுத்து

இயக்குனர் மாரி செல்வராஜூவின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்து என்பவர் திடீரென மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்த மாரி செல்வராஜ், இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவரின் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் அவருக்கு பெரிய வெற்றிபடமாக அமைந்த நிலையில், பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. அடுத்து உதயநிதி நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற படத்தை இயக்கிய வருகிறார். இதற்கு அடுத்து அவர் மீண்டும் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இதனிடையே மாரி செல்வராஜூவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்து என்பவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரி செல்வராஜூவின் 2-வது படமாக கர்ணன் படத்தில் உதவி இயக்குனராக பணியை தொடங்கிய மாரிமுத்து அடுத்து மாமன்னன், தற்போது இயக்கி வரும் வாழை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த மாரிமுத்து அடுத்த ஆண்டு இயக்குநராக அறிமுகமாக இருந்துள்ளார். தனது படத்திற்காக கதையை எழுத தயாராகி வந்த அவருக்கு, புகை பிடிக்கும் கெட்ட பழக்கம் இருப்பதாகவும், ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் தொடர்ந்து புகைபிடித்ததால் அவர் மூச்சுத்திணறி இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறப்பதற்கு முன்பாக  லேசான மார்பு வலி இருப்பதாக கூறியதை தொடர்ந்து அவரது நண்பர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மாரிமுத்து மரணமடைந்துள்ளார். 30 வயதான உதவி இயக்குநருக்கு ஷீபா என்ற மனைவியும், சாமுவேல் என்ற 5 வயது மகனும் உள்ளனர். இந்த மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment