சினிமா ஆசை வர இவங்க படம் தான் காரணம்: நடிகை முன் நெகிழ்ந்த பாண்டிராஜ்!

இயக்குநர் பாண்டிராஜ் தான் சினிமாவை நோக்கி சென்னை வர முக்கிய காரணம் ‘காதல்’ கோட்டை படம் தான் என்றும், படத்தின் கிளைமேக்ஸில் எழுந்து நின்று கைத்தட்டியதாகவும் கூறியுள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ் தான் சினிமாவை நோக்கி சென்னை வர முக்கிய காரணம் ‘காதல்’ கோட்டை படம் தான் என்றும், படத்தின் கிளைமேக்ஸில் எழுந்து நின்று கைத்தட்டியதாகவும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Director Pandiraj love for cinema Kadhal Kottai Chennai Tamil News

"வெற்றியை தேடாமல் வேலையை ரசித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் வெற்றி நமது சிந்தனையில் இருந்தால் பாரம் வந்துவிடும்." என்று இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பேசப்படும் இயக்குநர்களில்  ஒருவர் பாண்டி ராஜ். கடந்த 2009-ஆம் ஆண்டு சசிகுமார் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டு அருள் நிதியை வைத்து ‘வம்சம்’ திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மெரினா’ திரைப்படத்தையும் இயக்கினார்.

Advertisment

’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘இது நம்ம ஆளு’, ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதற்கிடையே அண்மையில் இயக்குநர் பாண்டிராஜனுடன் சண்டையாமே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “எல்லாமே வேலைக்காகதான். எங்களுக்குள் சில சண்டைகள் வந்தது உண்மை தான். அதெல்லாம் இப்போது சரியாகிவிட்டது. இது சினிமாவில்  சகஜம் தான். 

வெற்றியை தேடாமல் வேலையை ரசித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் வெற்றி நமது சிந்தனையில் இருந்தால் பாரம் வந்துவிடும். ஆனால் வேலையை ரசித்து செய்தால் அனைத்தும் தேடி வரும் . விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டித்தான் வரவேண்டும். தவறு என்றால் திருத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

Advertisment
Advertisements

இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் புரொமோஷனின் போது சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அதிக வசூல் செய்ததாக  இயக்குநர் பாண்டிராஜ் கூறியதால் சூர்யா ரசிகர்கள் கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிகைண்ட்வுட்ஸ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாண்டிராஜ், காதல் கோட்டை படத்தால்தான் தான் சென்னை வந்ததாக கூறினார். அதாவது,  “காதல் கோட்டை படம் எனக்கு மறக்க முடியாத படம். ஏனென்றால் கிளைமேக்ஸில் எழுந்து கைத்தட்டியதில் நானும் ஒருவன். அந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு வாரத்தில் நான் சென்னைக்கு சினிமாவை நோக்கி வந்தேன். அதனால் என் வாழ்க்கையில் காதல் கோட்டை ஒரு மறக்க முடியாத படம். நடிகை தேவையானி 30 வருடமாக இந்த தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பது என்பது சாதாரண விஷயம் இல்லை” என்றார்.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: