தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு, தனது வளர்ச்சிக்கு நெருக்கமாக சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது இயக்குனர் பாண்டிராஜ் சிம்பு குறித்து பேசியுள்ள தகவல்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானர் சிம்பு, தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த இவர், நடிப்பு மட்டுமல்லாமல், இயக்கம், இசைமைப்பு, பாடல்கள் பாடுவது, என பன்முக திறமையுடன் வளம் வருகிறார். அதே சமயம், ஷூட்டிங்கிற்கு வரமாட்டார், தாமதமாக வருவார் என்று பல குறச்சாட்டுகள் சிம்பு மீது அவ்வப்போது எழுந்து வருகிறது.
ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்த சிம்பு, பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நிலையில், கடுமையாக பயிற்சிக்கு பின் உடல் எடையை குறைத்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியன ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியுள்ள சிம்பு, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், பல படங்களில் கமிட் ஆகி சிறப்பாக நடித்து வருகிறார். இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சிம்பு, தற்போது கமல்ஹாசனுடன், தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கி வரும் இந்த படத்தில் சிம்பு கமல்ஹாசனின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ள அவரின் 48-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு என்ற படத்தை இயக்கிய பாண்டிராஜ், சமீபத்தில் சிம்பு குறித்து பேசியபோது, நான் சோம்பேறிகளுடன் சேர மாட்டேன். என் படங்களில் நடித்த ஹீரோக்களுடன் இன்றுவரை நான் தொடர்பில் இருக்கிறேன். எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சனை என்று சொல்கிறார்கள். அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவரது அப்பா அம்மாவால் தான் பிரச்சனை வந்தது,
இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு லேட்டாக வந்தாலும், 8 மணி நேரத்தில் படமாக்க வேண்டிய காட்சிகளை 5 மணி நேரத்தில் முடித்துவிடுவார். அவ்வளவு திறமையான நபராக சிம்பு இப்படி இருக்கிறாரே என்பது தான் நான் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் கோபப்பட்டதில்லை. அவரும் என்னை பற்றி விடிவி கணேஷிடம் பெருமையாக பேசியுள்ளார். இப்போதும் நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“