Advertisment

விஜய் சாட்சியாக நடந்த எஸ்.ஏ.சி- ஷோபா திருமணம்: நிஜ ஃப்ளாஷ்பேக்

கோவிலுக்கு சென்றாலும், சர்ச்க்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். திருப்பதி சென்று நான் மொட்டை அடித்திருக்கிறேன்.

author-image
WebDesk
New Update
விஜய் சாட்சியாக நடந்த எஸ்.ஏ.சி- ஷோபா திருமணம்: நிஜ ஃப்ளாஷ்பேக்

இந்திய சினிமாவில் சுமார் 70 படங்களுக்கு மேல் இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தற்போதைய தமிழ் சினமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயின் அப்பாவான இவர், தமிழில் விஜயகாந்தை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்

Advertisment

மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய நான் சிகப்பு மனிதன் என்ற படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எஸ்.ஏ.சி. தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமா மற்றும் தனது சொந்த வாழக்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வகள் குறித்து யார் இந்த எஸ்.ஏ.சி என்ற தனது யூடியூப் சேனல் மூலம் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் இவர் பதிவிடும் வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எனது திருமணம் மகன் விஜய் சாட்சியாக வைத்து நடந்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோவில் பேசும் அவர், நானும் ஷோபாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நடிகர் திலகம் சிவாஜினியின் துணைவியார் தாலி எடுத்து கொடுத்தார்.

அடுத்த ஒரு வருடத்தில் விஜய் பிறந்தார். நான் கிறித்துவன் ஷோபா இந்து. திருமணத்திற்கு பிறகு கோவிலுக்கு சென்றாலும், சர்ச்க்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். திருப்பதி சென்று நான் மொட்டை அடித்திருக்கிறேன். அப்போது ஒருநாள் ஷோபா என்னிடம் கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொன்னாள்.

அதற்கு ஏன் என்று கேட்டபோது, இருவரும் வெவ்வேறு போட்டில் ஒன்றாக பயணிக்கிறோம். திடீரென்று ஏதாவது சுழல் வந்தால் இருவரும் ஒன்றாக கரை சேர முடியாது என்று சொன்னாள் தில் ஆயிரம் அர்த்தம் இருந்ததது. அவள் ஆசைப்படி கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். அப்போது 6 வயத பையனாக விஜய் சாட்சியாக இருந்தார். என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் தொடர்ந்து பேசிய அவர், தனது முதல்படம் கிடைத்த அனுபவம், விஜயகாந்த் தனது படத்தின் ஹீரோவாக தேர்வானது எப்படி சட்டம் ஒரு இருட்டறை என்ற டைட்டில் எதற்காக வைக்கப்பட்டது, இந்த கதை எதற்காக எழுதப்பட்டது என்பது குறித்து பல தகவல்களை கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment