Advertisment

அஜித்- பிரசாந்த் சண்டை... ஷாலினி காதல்... ஒரு நேரடி சாட்சி வாக்குமூலம்

பிரஷாந்துடன் கல்லூரி வாசல் படத்தில் இணைந்து நடித்த அஜித், பிரஷாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படத்தை தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து பார்த்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajith Shalini Prashanth

அஜித் - ஷாலினி - பிரஷாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது ஒரு ஹிட் பம் கொடுக்க போராடி வரும் நடிகர் பிரஷாந்த். தான் முன்னணி நடிகராக இருந்த காலகட்டத்தில் தற்போதைய முன்னணி நடிகரான அஜித்தை அசிங்ப்பப்படுத்திவிட்டதாக பல ஆண்டுகளாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து பல திரிக்கப்பட்ட தகவல்களும் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் சரண் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

அஜித்தின் திரை வாழ்க்கையில் அவருக்கு பெரிய வெற்றிப்பlமாக அமைந்தது காதல் மன்னன், அமர்க்களம். இந்த இரு படங்களையும் இயக்கியவர் இயக்குனர் சரண். இதில் அமர்க்களம் படத்தின் மூலம் ஷாலினியுடன் ஜோடி சேர்ந்த அஜித் பின்னாளில் அவருடன் தனது வாழ்க்கையை பகிர்ந்துகொண்டார். தற்போதுவரை தமிழ் சினிமாவில் அஜித் ஷாலினி இருவரும் நட்சத்திர தம்பதியாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சரண் கல்லூரி வாசல் படப்பிடிப்பின் போது அஜித் – பிரஷாந்த் மோதல் குறித்தும், அஜித் ஷாலினி காதல் குறித்தும் பேசியுள்ளார். இதில், அஜித் பிரஷாந்த் மோதல் என்பது நடக்காத ஒன்று. அந்த மாதிரி ஒன்று நடந்திருந்தால் பிரஷாந்த் நடித்த ஒரு படத்தை கூட அஜித் பார்த்திருக்க மாட்டார். ஆனால் பிரஷாந்துடன் கல்லூரி வாசல் படத்தில் இணைந்து நடித்த அஜித், பிரஷாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படத்தை தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து பார்த்தார்.

அஜித் ஷாலினி திருமணம் முடிவானபோது ஷாலினி பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த படம் பாதியில் இருக்கும்போதே ஷாலினி அஜித்தை திருமணம் செய்துகொண்டார். அதனால் அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு ஷாலினி பங்கேற்க சற்று தாமதமாகிவிட்டது. அதை வைத்து அஜித்துக்கும் பிரஷாந்துக்கும் மோதல் என்று வதந்தி பரப்பி விட்டுவிட்டார்கள்.

அதேபோல் அமர்களம் படப்பிடிப்பின் ஒருநாள் அஜித் ஷாலினி இருவருக்கும் இடையில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது இந்த படத்தின் படப்பிடிப்பை சீக்கிரம் முடித்துவிடுங்கள் இல்லையென்றால் நான் இந்த பெண்னை லவ் பண்ணிடுவேனோனு பயமா இருக்கு என்று சொன்னார். அது அவரின் ப்ரபோசல். அதை கேட்டு ஷாலினி வெட்கப்பட்டார். அப்போதுதான் அவர்கள் காதல் மலர்ந்தது என்று எனக்கு தெரிந்தது என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment