ஹீரோயின் லேட் என்ட்ரி, சாப்பிட விடாமல் கேப்டனை எழுப்பியது ஏன்? உண்மை உடைத்த படத்தின் இயக்குனர்!

’அகல் விளக்கு’ படப்பிடிப்பின் போது நடிகர் விஜயகாந்தை சாப்பிடவிடாமல் எழுப்பியது ஏன்? என்பது குறித்து இயக்குநர் மனம் திறந்துள்ளார்.

’அகல் விளக்கு’ படப்பிடிப்பின் போது நடிகர் விஜயகாந்தை சாப்பிடவிடாமல் எழுப்பியது ஏன்? என்பது குறித்து இயக்குநர் மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vijaya

ஹீரோயின் லேட் என்ட்ரி, சாப்பிட விடாமல் கேப்டனை எழுப்பியது ஏன்? உண்மை உடைத்த படத்தின் இயக்குனர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயகாந்த் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். நடிகர் விஜயகாந்த் கடந்த 1979-ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் தான் திரைத்துறையில் அறிமுகமானார்.

Advertisment

பின்னர் பல வெற்றிப் படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில், ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்தை சாப்பிடவிடாமல் எழுப்பியது ஏன் என்பது குறித்து இயக்குநர் செல்வராஜ் மனம் திறந்துள்ளார். 

அவர் பேசியதாவது, “விஜயகாந்தின் சகோதரர் என்னுடைய நண்பர். நான் சென்னை வந்த பிறகு அவர் விஜயகாந்த், இயக்குநர் காஜா இயக்கத்தில் ‘இனிக்கும் இளமை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். நீங்கள் நினைத்தால் கதாநாயகனாக பண்ணலாம். 

விஜயராஜ் என்பதை விஜயகாந்த் என்று மாற்றம் செய்துள்ளோம். ரஜினிகாந்த் என்பதால் இப்படி வைத்துள்ளோம் என்றார். ‘அகல் விளக்கு’ படத்தில் விஜயகாந்த் நடிப்பதற்கு பெரும் போராட்டமே நடந்தது. கடைசி வரைக்கும் இந்த போராட்டம் இருந்தது. மதுரையில் படப்பிடிப்பு நடந்தது. 

Advertisment
Advertisements

இதற்கு இடையில் பாலு மகேந்திரா போன் செய்து எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்றார். நான் நடிகை ஷோபாவிடம் கதை கூறினேன். அவருக்கு அந்த கதை பிடித்துவிட்டது. படப்பிடிப்பிற்கு தேதி குறித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றோம். 

தயாரிப்பாளருக்கு நடிகர் விஜயகாந்தை பிடிக்கவில்லை. படப்பிடிப்பு நேரமாகிவிட்டது நடிகை ஷோபா வரவில்லை. நான் விஜயகாந்திடம் நீங்கள் சாப்பிடுங்கள். அந்த பொண்ணு இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டு காத்திருந்தேன்.

இவர்கள் எல்லாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஒரு காரில் ஷோபா வந்தார். வந்ததும் என் காலில் விழுந்துவிட்டார். எனக்கும் பாலுவிற்கும் இன்று தான் திருமணம் நடந்தது. அதுதான் சிறிது நேரமாகிவிட்டது என்றார். அதன்பின்னர், விஜயகாந்தை வர சொல்லுங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்துவிடலாம் என்றேன். 

அப்போது தயாரிப்பாளர் அஷ்டமி வரப்போகிறது கதாநாயகியை மட்டும் வைத்து எடுங்கள் என்றார்.
நான் என்ன நடந்தாலும் பரவாயில்லை விஜயகாந்த் வந்தால் தான் படப்பிடிப்பை ஆரம்பிப்பேன் என்றேன். அதன்பிறகு விஜயகாந்த் வந்ததும் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். விஜயகாந்த் ரொம்ப அருமையான நபர்” என்றார்.

Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: