/tamil-ie/media/media_files/uploads/2018/06/1111-29.jpg)
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், விரைவில் திரையிக்கு வரவிருக்கும் ட்ராஃபிக் ராமசாமி திரைப்படத்தை குறித்து பல தகவல்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.
சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதில் ட்ராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இதில் இயக்குநர் ஷங்கர், வைரமுத்து உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ஒருபக்கம் இருக்க, நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பேசியது கோலிவுட் வட்டாரத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ட்ராஃபிக் ராமசாமி திரைப்படத்தை இயக்குனர் ஷங்கரே எடுக்க நினைத்துள்ளார். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
மேடையில் இந்த ரகசியத்தை போட்டு உடைத்தார் இயக்குனர் ஷங்கர். அவர் பேசியிருப்பது. “ ட்ராஃபிக் ராமசாமி ஒரு கத்தி இல்லாத இந்தியன். வயதான் அம்பி. சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி என்னையும் கவர்ந்த ஒரு மனிதர். அவரை நினைத்து நான் பலமுறை பெருமைப்பட்டுள்ளேண். உண்மையை சொல்வ வேண்டும் என்றால் நானும் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க விரும்பினேன்.
அவரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப ரஜினி சாரை அதில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டேன். ஆனால் அப்பறம் தான் தெரிந்தது அதில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார் என்று. அதுவும் மகிழ்ச்சி தான்.ட்ராபிக் ராமசாமி படத்தை பார்க்க வேண்டும் என நானும் ஆவலாக உள்ளேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
ஷங்கரின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் கைதட்டல்கள் பறந்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.