Advertisment

முதல் படம் ரிலீசாகும் முன்பே இளம் தமிழ் இயக்குனர் பலி - நடிகை சஞ்சனா உருக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
udukkai movie director passed away, cinema news, cine news, kollywood news, உடுக்கை, இயக்குனர் மரணம், சினிமா செய்திகள்

udukkai movie director passed away, cinema news, cine news, kollywood news, உடுக்கை, இயக்குனர் மரணம், சினிமா செய்திகள்

கொரோனா லாக்டவுனில் நடிகர் விசு, இர்ஃபான் கான், ரிஷி கபூர் உள்ளிட்ட திரைத்துறையின் பெரும் ஆளுமைகள் சிலர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தனர். சமீபத்தில் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அதேபோல் பாலிவுட் சின்னத்திரை நடிகர்கள் மன்மீத் கெர்வால் பொருளாதார நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

தமிழில் ஜி.வி.பிரகாஷின் 4ஜி பட இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவரது முதல் திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இத்தகைய மரணங்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தின.

10, 2020

இந்நிலையில் 'உடுக்கை' என்ற படத்தை இயக்கி வந்த அறிமுக இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததாக நடிகை சஞ்சனா சிங் கூறியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், என்னுடைய உடுக்கை பட இயக்குநர் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். மிகவும் இனிமையான மனிதர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

10, 2020

அறிமுக இயக்குநர் பாலமித்ரன் பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment