Advertisment

அம்பேத்கர், பெரியார், காமராஜர் மட்டும் போதுமா? விஜய் பேச்சுக்கு வெற்றிமாறன் பதில்

அம்பேத்கர், பெரியார் காமராஜர் ஆகியோரை படிக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று விஜய் கூறினார்

author-image
WebDesk
New Update
Vijay Vetrimaran

இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் விஜய்

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய நடிகர் விஜய் அம்பேத்கர் பெரியார் காமராஜர் உள்ளிட்டோரை படிக்க வேண்டும் என்று கூறியது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ள கருத்து இணையத்தில் அதிகம் கவனம ஈர்த்து வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறது. இதனிடையே விரைவில்’ விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக சமீப காலமாக விஜய் அரசியல் தொடர்பான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று சென்னை நீலாங்கரை பகுதியில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், தனுஷின் அசுரன் படத்தில் இடம்பெற்ற படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது என்ற டைலாக்குடன் தொடங்கினார். தொடர்ந்து வருங்கால வாக்காளர்கள் நீங்கள் தான். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் கலாச்சாரத்தை நீங்கள் தான் மாற்ற வேண்டும். உங்கள் பெற்றோரிடம் சொல்லி பணம் வாங்காமல் ஓட்டு போட சொல்ல வேண்டும்.

மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தவறாக முடிவை எடுத்துவிட கூடாது. உங்கள் குணங்களை நீங்கள் மறந்துவிட கூடாது. அதேபோல் அம்பேத்கர், பெரியார் காமராஜர் ஆகியோரை படிக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். விஜயின் இந்த முதல் அரசியல் தொடர்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விஜயின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன், “சினிமாவில் நாம் சொல்லும் ஒரு விஷயம், சமூகத்தில் ஆளுமைமிக்க ஒருவரை அது சென்றடையும் போது, அதனுடைய நேர்மறையான தாக்கம் என்ன என்பதை இதன் மூலம் பார்க்க முடிகிறது. அந்த மேடையில் அவர் சொன்னபடி, நம்ம நம்மளுடைய வரலாறை தெரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோருடன் அண்ணாவை பற்றியும் படிக்க வேண்டும் என நான் சொல்லுவேன் என தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vetrimaaran Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment