ஜாலி பாட்டுல எதுக்கு அழுகை? இந்த வரி மாத்திக்கலாமா? டைரக்டரிடம் அனுமதி கேட்ட இசைஞானி: அது இந்த பாட்டு தான்!

தன் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்றின் வரிகளை இசைஞானி இளையராஜா மாற்றியது குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் மனம் திறந்துள்ளார்.

தன் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்றின் வரிகளை இசைஞானி இளையராஜா மாற்றியது குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
arin

ஜாலி பாட்டுல எதுக்கு அழுகை? இந்த வரி மாத்திக்கலாமா? டைரக்டரிடம் அனுமதி கேட்ட இசைஞானி: அது இந்த பாட்டு தான்!

கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ‘குறும்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, அஜித்குமார் நடிப்பில்  ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கி மாஸ் காட்டினார். அஜித்தின் சினிமா பயணத்தில் ‘பில்லா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Advertisment

இந்த படத்தில் நயன்தாரா, நமீதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் மூலம் இயக்குநர் விஷ்ணுவர்தனும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். இதையடுத்து பாலிவுட்டிற்கு சென்ற இயக்குநர் விஷ்ணுவர்தன் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கினார்.

கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளியான இப்படத்தின் மூலம் இயக்குநர் விஷ்ணுவர்தன் மிகப்பெரிய வெற்றியை ருசித்தார். பாலிவுட்டிலும் முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றார். கடந்த 2005-ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படம் இன்று வரை மக்கள் ரசித்து பார்க்கும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், நவ்தீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும், ‘நம்ம காட்டுல மழை பெய்து’ பாடல் இசைஞானி இளையராஜா குரலில் வெளியாகி இன்று வரை ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில், இந்த பாடலை இளையராஜா பாடும் போது அவர் செய்த ஒரு செயல் என் அறிவுக்கண்ணை திறந்து என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “ராஜா சார் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் எனக்காக பாடியிருக்கிறார். ’நம்ம காட்டுல மழை பெய்து’ பாடலில் குமுற குமுற கொண்டாடு என்று ஒரு வரி வரும்.

இதை பார்த்த இளையராஜா ‘குமுற குமுற’ என்ற வார்த்தையின் பொருள் குமுறி அழுவது என்பதுதான். இது ஒரு சந்தோஷமான பாடல் இதற்கு எதற்கு அந்த வரி ’குதித்து குதித்து’ போட்டுக்கலாமா? உங்க கவிஞரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். அந்த ஒரு வார்த்தையில் இளையராஜாவின் முழு இசை பயணமும் எனக்கு தெரிவிட்டது. மேலும், பாட்டின் வரிகளை எப்படி அணுக வேண்டும் என்ற எனது கண்களும் திறந்துவிட்டது” என்றார்.

Cinema Ilaiyaraaja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: