'பயணிகளின் கனிவான கவனத்திற்கு'... சென்னை சென்ட்ரலில் ஒலிக்கும் குரல் இவர் தான்; பல நடிகைகளின் வாய்ஸ்!

ஜெயகீதா தமிழ் சினிமா உலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு டப்பிங் கலைஞராவார். அவர் ரயில்நிலையங்களில் கூட அறிவிப்புகளில் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெயகீதா தமிழ் சினிமா உலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு டப்பிங் கலைஞராவார். அவர் ரயில்நிலையங்களில் கூட அறிவிப்புகளில் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
dubbing artist jeyageetha

டப்பிங் கலைஞர் ஜெயகீதா தமிழ் சினிமா உலகில் தான் பணியாற்றிய அனுபவம் மற்றும் தனது குரல் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்றெல்லாம் அவள் விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். சினிமா தவிர ரயில்நிலையங்களிலும் ஜெயகீதா அறிவிப்புகள் ஒளித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் சிலவற்றை பேசியும் காட்டியுள்ளார். அவற்றை பற்றி பார்ப்போம்.

Advertisment

தமிழ் திரையுலகில், சில முகங்கள் மட்டுமே நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். ஆனால், சில குரல்கள் மட்டும் ஆயிரக்கணக்கான முகங்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கலைஞர்தான் ஜெயகீதா. அவர் பல முன்னணி நடிகைகளின் குரலாக ஒலித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.அவர் முகம் பிரபலமாக அறியப்படாவிட்டாலும் குரல் வாயிலாக நிறைய கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். 

மத்திய ரயில்வே நிலையத்தில் அறிவிப்புகளுக்கு ஜெயகீதாவின் குரல் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.  மூன்று மொழிகளில் அறிவிப்புகளுக்கு அவர்களின் குரல் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் பயணம் செய்யும் போது, அறிவிப்புகள் செய்யும் அவர்களின் சொந்த குரலை அவர்கள் கேட்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஜெயகீதா மைசூரிலிருந்து பயணிக்கும் வந்தே பாரத் ரயில் உள்ளே ஒலிக்கும் குரலும் பேசியுள்ளதாகவும் குறிப்பாக சிற்றுண்டிகள் மற்றும் வரவிருக்கும் சந்திப்புகள் பற்றிய அறிவிப்புகளுக்கு அவர்கள் குரல் வேலை செய்துள்ளதாகக் கூறுகிறார்.

ஜெயகீதா, சிம்ரன், ஜோதிகா, மீனா, ரம்பா, குஷ்பூ, தேவயானி, த்ரிஷா, நயன்தாரா, சினேகா, கௌசல்யா போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் பேசியுள்ளார். 2,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், 6,000-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் இவரே டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

ஒரு நடிகையின் குரல் என்பது அவரது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் முக்கியமான அம்சம். ஜெயகீதாவின் குரல், இந்த நடிகைகளின் கதாபாத்திரங்களுக்கு உணர்வுகளையும், ஆழத்தையும் சேர்த்திருக்கிறது. ஒரு நடிகையின் நடிப்பை முழுமையடையச் செய்வதில் டப்பிங் கலைஞரின் பங்கு மிகவும் பெரியது. அந்த வரிசையில் சினிமாவைத் தாண்டி, ஜெயகீதாவின் குரல் பொதுமக்களின் வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக உள்ளது. அவர் ரயில் நிலையங்களிலும் அறிவிப்புகள் செய்துள்ளார். பயணிகளுக்கு சரியான நேரத்தில் ரயில்கள் பற்றிய தகவல்களை அறிவித்து, அவர்களின் பயணத்திற்கு அவர் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். வந்தே பாரத் உள்ளேயும் இவரது குரல் ஒலித்திருக்கிறது. 

ஜெயகீதா ஒரு டப்பிங் கலைஞராக மட்டுமின்றி, ஒரு பன்முகத் திறமையாளராகவும் திகழ்கிறார். திரையில் அவர் தோன்றவில்லை என்றாலும், அவரது குரல் தமிழ் சினிமாவின் பல வெற்றிகரமான திரைப்படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. தனது தனித்துவமான குரலால், ஆயிரக்கணக்கான முகங்களுக்கு உயிர் கொடுத்து, தமிழ் திரையுலகின் மறக்க முடியாத டப்பிங் கலைஞராக ஜெயகீதா இருக்கிறார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: