/tamil-ie/media/media_files/uploads/2018/04/Dulquer-Salman.jpg)
தமிழில் வாயை மூடிப் பேசவும், ஓகே கண்மணி, சோலோ படங்களில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தற்போது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தில் நடுத்தி வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரீது வர்மா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் துல்கர் சல்மான், அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
புதிதாக வெளிவர உள்ள படத்தில் துல்கருக்கு ஜோடியாக 4 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். தற்போது துல்கர் சல்மானுடன் நடிக்க நிவேதா பெத்துராஜ், ஷாலினி பாண்டே ஆகிய 2 நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 கதாநாயகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக சோலோ திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தன்ஷிகா, ஸ்ருதி ஹரிகரன், நேகா ஷர்மா, ஆர்த்தி வெங்கடேஷ் என நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.