/tamil-ie/media/media_files/uploads/2019/04/FotoJet-1.jpg)
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை மற்றும் சட்ட மன்ற இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
காலை 7 மணி முதலே பொதுமக்களும், திரை நட்சத்திரங்களும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாக்குச் சாவடிக்கு வந்தும் பட்டியலில் பெயர் இல்லை என திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் சில நடிகர்கள் வெளிநாட்டில் இருந்துக் கொண்டு வாக்களிக்க வராமல் இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சிம்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் உள்ளார். இயக்குநர் சுந்தர் சி-யும் விஷாலும் புதிய பட ஷூட்டிங்கில் துருக்கியில் உள்ளார்கள். நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பில் போர்ச்சுக்கல்லில் இருக்கிறார்.
ஆகையால் இவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது. தவிர, ஜோடி கிளிகள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் வாக்களித்தார்களா என ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.