/indian-express-tamil/media/media_files/wAX9Bqbl4X27ltcBXesE.jpg)
வானத்தைப் போல சீரியல்
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தான் படிக்கவில்லை என்றாலும், படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.
இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கொடூர வில்லனாக ஆணாதிக்கம் படைத்த மனிதனாக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த்து. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். அவர் இறந்துவிட்டத்தால் அவருக்க பதிலாக நடிகர் வேல ராம்மூர்த்தி ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்தார்.
கோலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்ற இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வந்த நிலையில், சமீபத்திய எபிசோடுகள் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் டி.ஆர்,பி ரேட்டிங்கிலும் சரிவை சந்தித்த எதிர்நீச்சல் கடந்த ஜூன் 8-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலின் இறுதிநாள் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமாக காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
தொடர்ந்து விரைவில் இந்த சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகும் என்ற தகவல்கள் வெளியானாலும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக வானத்தைப் போல சீரியலில், எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை இணைந்துள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட இந்த சீரியலில், முக்கிய கேரக்டரில் நடிக்க எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி மகளாக நடித்த தாரா கமிட் ஆகியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.