/tamil-ie/media/media_files/uploads/2022/09/feature-3.jpeg)
அக்டோபர் 2 ஆம் தேதி, தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகர் பிரதீப் குமார் நேரலையில் பங்கேற்கிறார். (Instagram/@pradeep_kumar1123)
Chennai This Week: இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தீபாவளியுடன் பல அரசு விடுமுறைகள் வருவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். அதனால் சென்னை மக்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் மாதம் பிரதீப் குமார், ஆண்ட்ரியா ஜெரிமியா பங்குகொள்ளும் இசை கச்சேரி சென்னையில் நடைபெறவுள்ளது. இசை கச்சேரிகளில் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தோசோல் (IndoSoul):
கர்னாடக இசை மற்றும் சமகால மேற்கத்திய வகைகளின் கலவையை வழங்கும் IndoSoul இசைக்குழு இந்த வாரம் சென்னையில் அரங்கேற்றவிருக்கிறது. அவர்களின் ஆல்பமான ‘ஈக்விலிப்ரியம்’ பாடல்களை அவர்கள் பாடவிருக்கிறார்கள். செப்டம்பர் 30ஆம் தேதியன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள கியர்ஸ் & கேரேஜ்-இல் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழலாம்.
ஆண்ட்ரியா ஜெரேமியா உடன் நேரலை:
பாடகர்களான ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸி ஆகியோர் கலந்துகொள்ளும், நேரடி இசை நிகழ்ச்சி பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் நடைபெற உள்ளது. நடிகர், பின்னணிப் பாடகி மற்றும் இசைக்கலைஞர் ஆண்ட்ரியா ஜெரேமியா அக்டோபர் 1 ஆம் தேதி மாலை 5 மணி முதல் மேடையில் மக்களை மகிழ்விக்க உள்ளார்.
பீனிக்ஸ்ஸில் பிரதீப் குமார்:
ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி அதன் இசை நிகழ்வுகளுடன் முடிக்கப்படவில்லை. இந்த வார இறுதியில், அக்டோபர் 2 ஆம் தேதி அன்று, தமிழ்த் திரையுலகின் பின்னணிப் பாடகர்களில் ஒருவரான பிரதீப் குமார் நேரலையில் பங்கேற்க உள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதீப் குமாரின் பாடலை கேட்டு மகிழ வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டிக்கு செல்லுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.