New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/sathish-edt-.jpeg)
Tamil Serial News : ரசிகர்களின் வசவுகளால் சகித்துக் கொள்ள முடியாத கோபி, இன்ஸ்டாகிராமில் தனது மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.
சீரியல் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட்டாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. பாக்கியலட்சுமியில், அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்க உள்ளது என எதிர்பார்ப்பு ஒரு புறமிருக்க, முந்தைய எபிசோடுகளில் பிரச்னைக்கு காரணமான பாக்யாவின் கணவர் கோபியை ரசிகர்கள் அர்ச்சணை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
என்ன நடந்தது பாக்கியலட்சுமி வீட்டில்!?
பாக்கியலட்சுமி கோபி தம்பதியின் கடைசி மகள் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த சில எபிசோடுகளில் அவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில், பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்ததால் அவரை தலைமையாசிரியர், டிசி கொடுத்து அனுப்பிவிடுகிறார். மகளின் ஒழுக்கமின்மை செயலுக்கு மனைவி பாக்யா தான் காரணம் என எண்ணி, பாக்யா மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் உருவாக்கிய மசாலா கம்பெனியை அடித்து நொறுக்குகிறார், கோபி.
இந்த நிலையில், பாக்யா குடும்பத்தில் குழப்பம் குடி சூழ ஆரம்பித்துவிட்டது. குழப்பத்துக்கு காரணகர்த்தா கோபியை சமூக வலைதளங்களில் பாக்யாவின் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ரசிகர்களின் வசவுகளால் சகித்துக் கொள்ள முடியாத கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ், இன்ஸ்டாகிராமில் தனது மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ஆரம்பிச்சிட்டாங்க. யூடியூப்ல கிழிக்க தொடங்கிட்டாங்க. காதுல ரத்தம் வர்ற மாதிரியெல்லாம் பேசுறாங்க. என்ன பண்றது. கதையில இன்னும் கடினமான காட்சியெல்லாம் காத்துட்டு இருக்கு. உங்களோட திட்டு எல்லாத்தையும் தாங்குவேன்’ என பரிதாபமாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.