Advertisment

விவாகரத்து: தொடர் விமர்சனம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? ஜி.வி பிரகாஷ் உருக்கமான பதிவு

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி பிரகாஷ் மிகவும் உருக்காமாக பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி பிரகாஷ் மிகவும் உருக்காமாக பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

Advertisment

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி பாடகி சைந்தவி இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்றதாகவும், பிரிந்து வாழப்போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் இந்த செய்தி, பல்வேறு வகையில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் முக்கிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

” புதிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம்  கொடுத்து சமூக ஊடங்களில் வெளிப்படுத்துவதால் அது “ யாரோ ஒரு தனிநபரின்” வாழக்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா?

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து  பின்புதான் இருவரும்  இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையாலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சமந்தப்பட்டவர்களின் மனதை மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே  இதை பதிவிடுகிறேன். ஒவ்வோரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்கள் ஆதரவுக்கு நெஞ்சாந்த நன்றி ” என்று தெரிவித்துள்ளார்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment