கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் படம் நவம்பர் 24-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் படம் வெளியாகவில்லை. இதனிடையே படத்தின் வெளியீடு குறித்து கௌதம்மேனன் தற்போது மௌனம் கலைத்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க : Gautham Menon breaks silence on Dhruva Natchathiram’s delay, assures audiences that film ‘will see the light of the day’
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் துருவநட்சத்திரம். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. பல தயாரிப்பு சிக்கல்களை சந்தித்த இந்த படத்திற்கு நிதியுதலி அளித்தவர்கள் கொரோனா தொற்று காலத்தில் தங்களது முதலீட்டு தொகையை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இதனைத் தொடந்து தானே இந்த படத்திற்கு தயாரிப்பாளராக கௌதம் மேனன், தொடர்ந்து பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படத்தை வெளியிடுவதற்காகத்தான் தான் நடிக்க வந்தேன் என்றும் தெரிவித்திருந்த கெளதம்மேனன், தனது தயாரிப்பு நிறுவனமான ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் மூலம் படதை வெளியிட முயற்சி செய்து நவம்பர் 24-ந் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
நவம்பர் 23 ஆம் தேதி வரை வெளியீட்டை உறுதிப்படுத்தியிருந்தாலும், படம் திரையரங்குகளில் வரவில்லை. இதனிடையே தற்போது படத்தின் வெளியீடு குறித்து மௌனம் கலைத்துள்ள இயக்குனர் கௌதம் மேனன் தாமதம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நாங்கள் மலையை நகர்த்த முயற்சி செய்தோம் ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இது எங்கள் முழு டீமுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. தற்போது புதிய ரிலீஸ் தேதியை நோக்கி பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு எதிராக பல சக்திகள் செயல்படுகின்றன எனறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல ஏமாற்றங்களை சந்தித்த போதிலும், கௌதம் மேனன் ட்விட்டர் பதிவின் கீழ் அவருக்கு ஆதரவான கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்திற்கு நிதியுதவி செய்த பலரும், படம் வெளியாவதற்கு முன் தங்களது பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறியதால், கடைசி நேரத்தில் படம் வெளியாவில்லை. இது குறித்து கௌதம் மேனன் அளித்த பேட்டியில், படத்தை ஓடிடி தளத்திற்கு விற்று பங்குதாரர்களுக்கு பணம் செலுத்த முயற்சிப்பதாகவும், இதுவரை யாரும் அப்படி கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஸ்பை-த்ரில்லர் கதையம்சமான துருவ நட்சத்திரம், தெரியாத பல அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் ரகசிய உளவாளி குழுவைப் பற்றியது. துருவ் (விக்ரம்) தலைமையில், ஒரு வலிமைமிக்க வில்லனிடமிருந்து (விநாயகன் நடித்தார்) நாட்டை காப்பாற்றும் தனிப்பட்ட பணிக்காக ஒன்று கூடுகிறது. ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“