Advertisment

48 வயதில் ப்ரக்னன்சி; இப்பதான் மெச்சூரிட்டி வந்திருக்கு: நடிகை ஷர்மிளி

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையிலும் கவர்ச்சியிலும் கலக்கிய நடிகை ஷர்மிளி 48 வயதில் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
glamor actress sharmili glamor actress sharmili pregnant at 48 age, glamor actress sharmili pregnancy, நடிகை ஷர்மிளி 48 வயதில் ப்ரக்னன்சி, ஷர்மிளி இப்பதான் மெச்சூரிட்டி வந்திருக்கு, நடிகை ஷர்மிளி, actress sharmili pregnant at 48 age

நடிகை ஷர்மிளி

தமிழ் சினிமா உலகில் 1990-களில் நகைச்சுவையிலும் கவர்ச்சியிலும் கலக்கியவர் நடிகை ஷர்மிளி. சினிமாவில் நிறைய வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவில் இருந்து ஒதுங்கிருந்தாலும் ரசிகர்கள் இன்னும் ஷர்மிளியை நினைவில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Advertisment

இந்நிலையில், நடிகை ஷர்மிளி தனது 48வது வயதில் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும் இப்போதுதான் மெச்சூரிட்டி வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை ஷர்மிளி கூறியிருப்பதாவது: “13 வயதில் இருந்து சினிமாவில் இருக்கிறேன். இத்தனை வருசத்துக்கு அப்புறம் கர்ப்பமா இருக்கேன். அதனால் தான், கொஞ்சம் கவனமா இருக்கவேண்டும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறேன்.

publive-image

ஆரம்பத்தில் நம்மை யாராவது தள்ளிப் போ என்று கூறினால், ‘ம் சரி சார்..’ என்று ஒதுங்கிப் போவதுண்டு. இப்போது, ‘என்ன? நீ தள்ளிப் போ..’ என்று தான் கூறுவேன். என் கணவர் கூறுவார், ‘நீ பயங்கர டஃப்..’ என்று. வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருக்கிறது. என் கணவரும் சொன்னார், ‘போய் நடி.. நீ நடிக்கலாம்’ என்று. அதனால் தான் , சரி நாமும் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

நான் இப்போது தான் கர்ப்பமாக இருக்கிறேன். எல்லாரும் நினைப்பாங்க, ‘ஷர்மிளிக்கு இந்த வயசுல இது தேவையா?’ என்று. நீங்கள் எல்லாம் பெத்துட்டீங்க, அதுங்களும் வளர்ந்துடுசு்சு, நான் என்ன பண்றது? அப்போ பெத்திருந்தால் கூட எப்படி காப்பாற்றியிருப்போம் என்று கூட எனக்கு தெரிந்திருக்காது.

இப்போது கர்ப்பமாக இருப்பது, குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்கிற நம்பிக்கையை தந்துள்ளது. இப்போ தான் எனக்கு மெச்சூரிட்டி வந்திருக்கு. பருவத்தில் நான் குழந்தை பெற்றிருந்தால், இந்நேரம் என் குழந்தை காலேஜ் போயிருப்பாங்க, கடவுள் எனக்கு வாழ்க்கையை தாமதமாகத் தான் கொடுத்தார்.

40-க்கு மேலே தான் எனக்கு வாழ்க்கையை கடவுள் கொடுத்தார். குழந்தையையும் 40-க்கு மேல் தான் கொடுத்துள்ளார். எல்லாமே தாமதம் தான். குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறேன். என் கணவர் அர்விந்த் ஐடி-யில் வேலை செய்கிறார். அவர் படித்துக் கொண்டே இருக்கிறார்.

நான் இப்போது சினிமாவில் இல்லை. சீரியலில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிக்கலாம், ஆனால் அடுத்த ஆண்டு தான் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். நான் ராமநாதபுரத்தில் இருக்கிறேன். அங்கே தான் குடும்பத்தலைவியாக வசித்து வருகிறேன்.

நான் ஒரு நேரத்தில் கல்யாணமே வேண்டாம் , ஜாலியா இருக்கலாம் என்று நினைத்தேன். சம்பாதிக்கலாம், சாப்பிடலாம் என்று இருந்தேன். 40 வயதிற்கு மேல் தான் துணை வேண்டும் என்பதே தெரிந்தது. இளம் வயதில் எப்போதும் அது தெரியாது.

நல்லவானா தான் கிடைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. கிடைக்கும் வாழ்க்கையை நன்றாக மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மை மட்டும் நம்பி இருக்கிறவங்க நமக்கு வேண்டாம், நம்மை காப்பாற்றுபவர்கள் கிடைத்தால் போதும். நம் ஊதியத்தை நம்பி அவர்கள் இருக்க கூடாது. சம்பாதிக்கும் நபரைப் பார்த்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

என் கணவர் இதுவரை என் பெயரை கூறி அழைத்தது இல்லை. இருவரும் அம்மு என்று தான் மாறி மாறி அழைத்துக் கொள்வோம். அந்த அளவிற்கு அவர் நாகரீகமானவர். ‘யோவ்.. 20 வருசத்துக்கு முன்னாடி வந்திருக்கலாம்ல… இவ்வளவு லேட்டா வந்திருக்க?’ என்று கேட்பேன்.

13 வயதில் இருந்து சினிமாவில் இருக்கிறேன். இத்தனை வருசத்துக்கு அப்புறம் கர்ப்பமா இருக்கேன். அதனால் தான், கொஞ்சம் கவனமா இருக்கவேண்டும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறேன். ஒரு வருடம் கழித்து தான் அடுத்து நடிப்பு பற்றி யோசிக்க வேண்டும்” ஷர்மிளி மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment