/indian-express-tamil/media/media_files/2025/08/14/screenshot-2025-08-14-235100-2025-08-14-23-51-14.jpg)
கிரேஸ் கருணாஸ் கோலிவுட் துறையின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர், அவர் தனது விதிவிலக்கான திறமைகளுக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டவர். அவர் ஒரு இந்திய பின்னணி பாடகி மற்றும் நடிகை.
அவர் எனக்கு இன்னொரு பேரு இருக்கு, ரகலைபுரம் மற்றும் பல பிரபலமான படங்களில் முக்கியமாக பணியாற்றியுள்ளார்.
அவர் இந்தியாவின் சென்னையில் பிறந்து வளர்ந்தார்.
வரது சிறு வயதிலிருந்தே பாடுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. மிக இளம் வயதிலேயே பாடுவதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, அவர் ஐந்து வயதிலேயே பூந்தமல்லியில் உள்ள CSI சர்ச்சுடன் இணைந்து பாடத் தொடங்கினார்.
மேலும் சர்ச் பாடகர் குழுவுடன் இணைந்து பாடினார். கிரேஸ் தனது முதல் இசையை "சீனா தானா டோய்" என்ற தலைப்பில் முதன்முதலில் வெளியிட்டார். கமல்ஹாசன் வசூல் ராஜா MBBS (2004) படத்தில் நடித்தார்.
இந்தப் பாடல் மெகா ஹிட்டானது, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் விரும்பப்பட்டது. கூடுதலாக, இந்தப் பாடலின் வெற்றி அவருக்குப் புகழையும் பல ஜாம்பவான்களிடமிருந்து அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.
கருணாஸ் இவரை படத்தின் இயக்குநர் சரண் மற்றும் இசை அமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோரிடம் பரிந்துரை செய்த பின்னர் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
விரைவில் இவர் தேவதையைக் கண்டேன் (2004) படத்திற்காக "விளக்கு ஒண்ணு", கற்க கசடற படத்தில் "ஆலப்புழா அம்மணி அல்லோ", ஆறு (2005 ) படத்தில் "பிரியா விடு மாமு", சண்டை (2008) படத்தில் "வாடி என் கப்பக் கிழங்கே" பாண்டி (2008) படத்தில் "ஆடியடங்கும்" போன்ற பிற படங்களில் பாடினார். 2010 களில், வழக்கமாக கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படங்களில் இவர் பாடினார்.
திரைப்படங்களில் படுவதுடன், கிரேஸ் பெரும்பாலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடிவந்தார். கிரேஸ் படங்களில் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார், குறிப்பாக திருவிளையாடல் ஆரம்பம் (2006) மற்றும் கதகளி (2016) ஆகிய படங்களில் துணை வேடங்களில் தோன்றினார்.
இவர் விஜய் டி வி யின் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாலியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பெற்றார். அது கூடவே அவர் அதே தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.
ஜெயா டிவியில் ஹரி கிரி நிகழச்சியில் இவர் பங்கேற்ற ஒரு நேர்காணல் இப்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதில் போஸ்க்கி இவரிடம் "கருணாவுக்கு உங்களை எப்போதிலிருந்து பிடித்து பொய் கல்யாணம் செய்தார்?" என்று கேள்வியை கேட்டார்.
அதற்க்கு அவர், "சரத்குமார் நடுவராக இருந்த ஒரு நிகழ்ச்சியில் பாடினேன். அப்போது அதில் நான் பாடியதால் மயங்கி போய் தான் அவர் என்னை கல்யாணம் செய்தாராம்" என்று சிரிப்புடன் கூறினார்.
அதற்க்கு அருகில் இருந்து சிட்டி பாபு, "நீங்கள் சரத்குமாருக்காக பாடியது கருணாஸ் அவருக்காக என்று நினைத்துக்கொண்டார் போல" என்று கிண்டலாக கேட்க, அதற்க்கு கிரேஸ், "அதற்க்கு நான் அவரை இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள முடியாது இல்லையா?" என்று வேடிக்கையாக பதில் கேள்வி கேட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.