தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். திருமணத்திற்கு பின் முதல் பிறந்த நாள் என்பதால் அவரின் வித்தியாசமான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நயன்தாரா சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து மாதவன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நயன்தாரா சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயாக மாறினார்.
இந்நிலையில், நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பின் தனது மனைவியின் முதல் பிறந்த நாளில் அவருக்கு கவிதை வடிவில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உன்னுடன் இது எனது 9வது பிறந்தநாள் உனது. ஒவ்வொரு பிறந்தநாளும் சிறப்பானது, மறக்கமுடியாதது மற்றும் வித்தியாசமானது! ஆனால், கணவனும் மனைவியும் சேர்ந்து ஒரு வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதால், இது எல்லாவற்றிலும் மிகவும் சிறப்பு வாய்ந்தது! அழகான இரண்டு குழந்தைகளின் தந்தை மற்றும் தாயாக
நான் எப்போதும் உன்னை அறிந்திருக்கிறேன், உன்னை ஒரு சக்திவாய்ந்த நபராக பார்த்தேன்! நீ எதைச் செய்தாலும் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டிய பலம்! இத்தனை வருடங்களில் நான் ஒரு வித்தியாசமான நபரைப் பார்த்திருக்கிறேன்! வாழ்க்கை மற்றும் எல்லாவற்றிலும் காட்டப்படும் உனது நேர்மையால் எப்போதும் ஈர்க்கப்பட்டேன்! ஆனால் இன்று ! நான் உன்னை ஒரு தாயாக பார்க்கும் போது! இதுவே உனது மகிழ்ச்சியான மற்றும் முழுமையான உருவாக்கம்!
நீ இப்போது முழுமையாடைந்துவிட்டாய். நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது! நீ மிகவும் அழகாக இருக்கிறாய்! குழந்தைகள் உன் முகத்தில் முத்தமிடுவதால் இந்த நாட்களில் நீ மேக்கப் போடுவதில்லை! இத்தனை வருடங்களில் உன்னை விட அழகான ஒருவரை நான் பார்த்ததில்லை!
உன் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகையும் மகிழ்ச்சியும், இனிமேல் உன் இயல்புநிலை அமைப்பாக இருக்கும்! நான் பிராத்திக்கிறேன் ! செட்டில் ஆகிவிட்டதாக உணர்கிறேன்! வாழ்க்கை அழகாக இருக்கிறது... திருப்தியாகவும் நன்றியுடனும் இருக்கிறது! பிறந்தநாளெல்லாம் இது போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்! நமது சிறிய குழந்தைகளுடன் .. நாம் அனைவரும் ஒன்றாக வளர்கிறோம்.
நாம் அனைவரும் அங்கே அதை எதிர்த்துப் போராட கற்றுக்கொள்கிறோம், அதே சமயம் அங்கே சண்டையிட்டு மகிழ்கிறோம் கடவுளின் ஆசீர்வாதத்துடனும் பிரபஞ்சத்தின் சாட்சியத்துடனும் நமக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை உருவாக்குகிறோம் !!! என் அன்பான போண்டாட்டி, தங்கமே எப்பொழுதும் என் உயிர் & உலகம் என்ற பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.