பாக்ஸ் ஆபிஸ் கிங், ரசிகர் படை… தமிழ் சினிமாவின் 'நம்பர் ஒன்' இடத்தை ஆளும் விஜய்!

விஜய்-யைப் பொறுத்தவரை அவரது கடைசி இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்துள்ளது. அவருக்கு வெளிநாடுகளிலும் கேரளாவிலும் பெரிய மார்க்கெட் உள்ளது.

விஜய்-யைப் பொறுத்தவரை அவரது கடைசி இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்துள்ளது. அவருக்கு வெளிநாடுகளிலும் கேரளாவிலும் பெரிய மார்க்கெட் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday Vijay, reigning numero uno of Tamil cinema

விஜய் தற்போது இண்டஸ்ட்ரியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

Happy Birthday Thalapathy Vijay: ‘இந்த நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு, எப்பவும் நான்தான் நம்பர் ஒன். அதுவும் சூப்பர் ஒன், நோ கம்பாரிசன், புரிஞ்சதா' என்று எந்திரன் 2.0-வில் கெட்ட சிட்டியாக ரஜினிகாந்த் கூறுகிறார். தமிழ்த் திரையுலகின் நம்பர் யார்? என்பது பற்றி அவ்வப்போது எழும் விவாதங்களுக்கு இதுதான் பதில். அஜித் அடுத்த சூப்பர் ஸ்டாராக வர விரும்புவதாக ஒருமுறை கூறியதும், அது அவரை சிக்கலில் சிக்க வைத்தது. அவர் விமர்சிக்கப்பட்டார் மற்றும் தற்பெருமை கூறுகிறார் என்று அழைக்கப்பட்டார். பின்னர், யாரேனும் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்றால் ஊக்கத்துடன் சந்திக்க வேண்டும், தாழ்த்தாமல் இருக்க வேண்டும் என்றார். இதேபோல், சிலம்பரசன் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’, ‘யங் சூப்பர் ஸ்டார்’ போன்ற பட்டங்களைப் பயன்படுத்தி விமர்சனங்களைச் சந்தித்துள்ளார். தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு, இந்த பட்டம் என்றென்றும் தங்களது 'தலைவருக்கு' தான் சொந்தமானது என்று உறுதியாக நம்புகிறார்கள்.

Advertisment

“பாலிவுட் அல்லது பிற திரைப்படத் துறைகளில், சிறந்த தொடக்க மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பெற்ற எந்த ஹீரோவும் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடப்படுகிறார். ஆனால், தமிழ் சினிமாவில் அப்படி இல்லை. ரஜினிகாந்து ஒருவருக்கே உரிய பட்டம் போல் உள்ளது. இப்போது யார் சிறந்த வெற்றி விகிதம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை கொன்டுள்ளார் என்று பார்க்கையில், தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறையில் விஜய் தான் நம்பர் ஒன் ஆக இருக்கிறார். எனவே அதை மறுக்க முடியாது. தொடர்ந்து அவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.” என்கிறார் தமிழ் திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ராஜசேகர்.

இருப்பினும், ரஜினியின் 2.o இன் சாதனையை விஜய் இன்னும் முறியடிக்கவில்லை. இது இன்னும் தமிழில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் விவாதம் என்னவென்றால், 2.0 ஒரு தமிழ் படமாக சந்தைப்படுத்தப்படவில்லை, மாறாக ஒரு பான்-இந்திய படமாகும். மறுபுறம், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரிடமிருந்தும் நடுநிலையான விமர்சனங்களைப் பெற்ற விஜய்யின் வரிசு, தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ரூ.60 கோடியை வசூலித்தது. மேலும் அதன் உலகளாவிய வசூல் ரூ.310 கோடியை எட்டியது. இது பேட்ட, அண்ணாத்த போன்ற சமீப காலங்களில் ரஜினிகாந்தின் படங்களை விட மிகப்பெரிய வெற்றிகளை பெற்று எளிதாக முன்னேறியுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத சென்னையில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறும்போது, ​​“விஜய் தற்போது இண்டஸ்ட்ரியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. அது சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்பதால் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்குவதில்லை. வெளியில் சொல்லப்படாவிட்டாலும், தமிழ் சினிமாவில் தற்போது யார் டாப்பில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது மற்ற நட்சத்திரங்களை விட விஜய் அதிக சம்பளம் வாங்குவது எந்த காரணத்திற்காகவும் இல்லை." என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

1999ல், ரஜினிகாந்த் 49 வயதை எட்டினார். அவரது பிறந்தநாளுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அவர் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஹிட்டான ஒன்றான படையப்பாவை வெளியிட்டார். அவர் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நேரம் அது. 1996-ல் தான் திமுகவுக்கு ஆதரவாக அறிவித்து, “ஜெயலலிதா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என்று கூறியிருந்தார். தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்றது. விஜய் 49 வயதை எட்டியுள்ள நிலையில், அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதுதான் தற்போதைய விவாதமாக இருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் முதலிடம் பெற்றவர்களை கவுரவிக்கும் நிகழ்வில் சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒருவேளை, வரலாறு தன்னைத்தானே திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளது என்பது கூறுவார்களே, அது உண்மைதான்.

விஜய்க்கும் ரஜினிகாந்துக்கும் உள்ள ஒற்றுமை அது மட்டும் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய் பிடித்து போக என்ன காரணம் என்று கேட்டால், தற்போது இண்டஸ்ட்ரியில் 'நம்பர் ஒன்' என்று ஒப்புக் கொள்ளும் மூத்த திரைப்பட பத்திரிகையாளர் ஸ்ரீதர் பிள்ளை, “அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல இருக்கிறார். பெரிய திரையில் அவர் வழங்கும் கூஸ்பம்ப்ஸ் தருணங்கள், நகைச்சுவையிலும் வல்லவர். அவர் சரியான கமர்ஷியல் மிக்ஸ். இவையெல்லாம் அவர் ரஜினிகாந்துடன் பகிர்ந்துகொண்ட பண்புகள்." என்கிறார்.

இருப்பினும், அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது மிக விரைவில் என்று பிள்ளை கூறுகிறார். "இல்லை. ஒருபோதும் இல்லை. பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரஜினிகாந்த் ஒரு உணர்ச்சி. விஜய் படங்கள் தற்போது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் ரஞ்சன் நாட்களில் இருந்தே அவரைப் போன்ற நட்சத்திரங்கள் இருந்திருக்கிறார்கள் (1941ல் அறிமுகமான ஒரு தமிழ் ஹீரோ). அப்போது எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் போன்றவர்கள் வெற்றி பெற்றனர். பிறகு கமல்ஹாசன், ரஜினிகாந்த் காலகட்டம் வந்தது. அவர்கள் அனைவரும் பழம்பெரும் நிலையை அடைந்துள்ளனர்.

விஜய்-யைப் பொறுத்தவரை அவரது கடைசி இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்துள்ளது. அவருக்கு வெளிநாடுகளிலும் கேரளாவிலும் பெரிய மார்க்கெட் உள்ளது. அவருடைய படங்களுக்கான சாட்டிலைட் மற்றும் இதர உரிமைகள் மற்ற எல்லா ஹீரோக்களையும் விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது ஒரு கட்டமாக மட்டுமே இருக்க முடியும். அவர் இன்னும் இளமையாக இருக்கிறார், பழம்பெரும் நிலைக்கு வர நீண்ட தூரம் உள்ளது. ஒருவேளை, அவர் எதிர்காலத்தில் அதை தனதாக்குவார்." என்கிறார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Actor Vijay Rajinikanth Vijay Superstar Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: