Advertisment

பிராவை கடவுள் அளவு எடுப்பதாக கூறிய டி.வி நடிகை: விசாரணைக்கு பா.ஜ.க அரசு உத்தரவு

Tamil Cinema Update : கடவுள் குறித்து சர்ச்சையாக பேசிய பிரபல இந்தி நடிகையின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
பிராவை கடவுள் அளவு எடுப்பதாக கூறிய டி.வி நடிகை: விசாரணைக்கு பா.ஜ.க அரசு உத்தரவு

Tamil Cinema Update ; மத்திய பிரதேச மாநிலம் போபலில் நடைபெற்ற பட விழா ஒன்றில் பங்கேற்ற பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரி கடவுள் என் ப்ராவை அளவிடுகிறார் என்று கூறியது தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் இந்தி தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரி. கடந்த 2011-ம் ஆண்டு பிக்பாஸ் சாம்பியன் பட்டம் வென்ற இவர், அதன்பிறகு பல இந்தி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில, ஸ்டாப்பர் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரின் ப்ரமோஷன் நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநிலம் போபலில் நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், நடிகை ஸ்வேதா திவாரியும் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், கடவுள் என் ப்ராவை அளவிடுகிறார் என்று கூறியுள்ளார். வரலாற்று தொடரான மகாபாரதம் தொடரில் கிருஷ்ணராக நடிக்கும், நடிகர் சௌரப் ஜெய்ன், இந்த தொடரில் மாடல்களுக்கு ப்ரா பொருத்தும் வேடத்தில் நடித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை வைத்துதான் நடிகை ஸ்வேதா திவாரி மறைமகமாக அவ்வாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகினறனர். இந்நிலையில், நடிகை ஸ்வேதா திவாரியின் இந்த பேச்சு குறித்து விசாணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று, மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா போபல் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment