சோழர்கள் வாழ்ந்த காலத்தில் இந்து என்ற சொல் இல்லை அது ஆங்கிலேயர்கள் கொடுத்துவிட்டு சென்றார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வம் பாகம்- 1 செப் .30ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்திற்கு பெறும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது ஒரு கற்பனை கதை மட்மே என்றும் இதை சோழர்களின் உண்மையான வரலாறு கிடையாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் 60-வது பிறந்த நாளையோட்டு தமிழ் ஸ்டுடியோ சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் “ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து?ஏது இந்தியா?இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள் .இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுபோல ஒரு கத்தை நடிகர் கமல்ஹாசனும் தெரிவித்துள்ளார். “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து இல்லை. சைவம் , வைணவ சமயம் மட்டுமே இருந்தது . இந்து மதத்தை ஆங்கிலேயர்கள்தான் கொடுத்துவிட்டு சென்றார்கள்” என்று தெரிவித்துள்ளார்.