சந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘100% காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரது ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். ஆரம்பத்தில் லாவண்யா திரிபாதி நடிப்பதாக இருந்தது. இந்த திடீர் மாற்றம் ஏன்? என்று இயக்குநர் சந்திரமவுலியிடம் கேட்டோம்.
‘‘முதலில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக லாவணியா திரிபாதி நடிப்பதாக ஒப்பந்தம் போட்டோம். மொத்த படத்தையும் லண்டனில் ஷூட்டிங் செய்ய திட்டமிட்டு இருந்தோம். இந்த படத்துக்காக ஜிவி.பிரகாஷ் 2 மாதம் மொத்தமாக ஹால்ஷீட் கொடுத்திருந்தார். லண்டனுக்கு ஷூட்டிங் கிளம்பும் நேரத்தில் லாவணியா திரிபாதி, லண்டனுக்கு வர முடியாது. இங்கேயே வேறு ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டார். எங்களுக்கு கடுமையான அதிர்ச்சி. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்த பிறகு ஹீரோயின் இப்படி சொன்னால் எப்படி இருக்கும். அந்த டைம்ல ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அதைப் பார்த்த என் பிரண்ட் ஒருவர், ஷாலினி பாண்டே பொருத்தமாக இருப்பார் என்று சொன்னாங்க.
ஒரிஜினல் ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் தமன்னா நடித்திருப்பார். பிரமாதமாக நடிச்சிருப்பார். ஆனால் ஷாலினி ஒரு குறிப்பிட்ட அளவுதான் பண்ணியிருப்பாங்க. ரொம்ப யோசிச்சுப் பார்த்தோம். ஏதோ ஒரு நம்பிக்கையில ஷாலினியை அழைத்தோம். நாம்பவே முடியாத அளவுக்கு பிரமாதமாக நடிச்சி கொடுத்தாங்க. லாவண்யா நடிச்சிருந்தா கூட இந்த அளவுக்கு நடிச்சிருப்பாங்களான்னு தெரியல’’ என்றார், சந்திரமவுலி.