Advertisment

PS - I படம் கல்கியின் நாவலுக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறது? பிழைகளை சுட்டிக்காட்டும் வரலாற்று ஆசிரியர்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் அதன் மூலக் கதைக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறது. அதன் எந்த பகுதி வரலாற்றில் உண்மையானது என்று ஒரு வரலாற்றாசிரியர் புனைகதையிலிருந்து உண்மையை வேறுபடுத்துகிறார்.

author-image
WebDesk
New Update
Ponniyin Selvan, Ponniyin Selvan news, Ponniyin Selvan story, Ponniyin Selvan explained, mani ratnam, watch Ponniyin Selvan, Ponniyin Selvan box office, ps collections, tamil history, the chola history

பொன்னியின் செல்வன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் அதன் மூலக் கதைக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறது. அதன் எந்த பகுதி வரலாற்றில் உண்மையானது என்று ஒரு வரலாற்றாசிரியர் புனைகதையிலிருந்து உண்மையை வேறுபடுத்துகிறார். அதே நேரத்தில், மணிரத்னத்தின் மகத்தான படைப்பின் தயாரிப்பு வடிவமைப்பில் சில வெளிப்படையான பிழைகளை சுட்டிக்காட்டுகிறார்.

Advertisment

இயக்குனர் மணிரத்னத்தின் வரலாற்று திரைப்படமான நாடகம் பொன்னியின் செல்வன் 1 பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. விரிவான மற்றும் சம்பவங்களைவிட சினிமாவுக்காக அதன் வித்தியாசமான அணுகுமுறை ஆகியவற்றிற்காகப் பாராட்டுகளைப் பெற்றுவரும் இந்த திரைப்படம், இந்திய வரலாற்றில் ஒரு காலகட்டத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. அது சோழப் பேரரசு மற்றும் ராஜராஜ சோழன் அரியணை ஏறியது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பரந்து விரிந்த புனைகதை படைப்பான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்ட இப்படம் எது புனைகதை, எது உண்மை என்று பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

உலக வரலாற்றில் மிகப் பெரிய அளவில் பதிவு செய்யப்பட்ட பேரரசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிற சோழர்கள் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உச்சத்தில் இருந்தனர். அவர்கள் 13 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியில் இருந்தனர். அவர்களின் அரசு துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கே உள்ள பகுதி முழுவதும் பரவி இருந்தது; அவர்கள் ராஜராஜனின் ஆட்சியின் போது இலங்கையை வெற்றிகொண்டு இணைத்துக்கொண்டனர். அதே நேரத்தில், அவரது மகன் ராஜேந்திரன் பாலா மன்னனை பாடலிபுத்திரத்தில் தோற்கடித்தார். சோழ மன்னன் ராஜேந்திரனும் கடல் வழியாக வெளிநாடுகளுக்குப் படையெடுத்துச் என்று தமிழ் வணிகத்தை விரிவுபடுத்தினான். கடல் வழியாக, சோழர்கள் ஸ்ரீவிஜயா, சுமத்ரா, கடாரம் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். மேலும், அவர்கள் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த கம்போடியா வரை சென்றனர். இவ்வாறு, சோழர்கள் இந்தியாவின் ஒரே கடல்வழிப் பேரரசு என்ற சிறப்பைப் பெற்றுள்ளனர்.

இருப்பினும், பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள சில முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. இந்த திரைப்படம் தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய, ஆனால் அரிதாகவே ஆய்வு செய்யப்பட்ட பகுதியை சுவிகரித்துக்கொன்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் வெளிப்படும் நிகழ்வுகள் அனைத்தும் கல்கியின் கற்பனையில் இருந்து பிறந்தவை.

publive-image

“பொன்னியின் செல்வன் முதலில் ஒரு நாவலாகத் தொடங்கியது. ஆனால், பின்னர் அது ஒரு நாவல் என்பதைவிட அது வரலாறாக மாறியது. பொன்னியின் செல்வனின் பெரும்பகுதி கற்பனையானது, சில உண்மையான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. நாம் படித்து மகிழ்வதற்காக சோழநாட்டின் அற்புதமான உலகத்தை கல்கி படைத்தார். அதையும் நாம் புறநிலையாக பார்க்க வேண்டும். அவர் உருவாக்கிய பல கதாபாத்திரங்கள் வரலாற்றில் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்” என்று எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் நாவலின் பல தசாப்த கால கலாச்சார தாக்கத்தைப் பற்றி பேசினார். கி.பி. 985-இல் அரியணை ஏறிய அருள்மொழிவர்மன், ராஜராஜன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டவன். அவனுடைய உடன்பிறப்புகள் குந்தவை மற்றும் ஆதித்த கரிகாலனைத் தவிர, பெரும்பாலான கதாபாத்திரங்கள் கல்கியின் கற்பனைப் பாத்திரங்களே.

“நந்தினி, ஆழ்வார்க்கடியான் போன்ற கதாபாத்திரங்கள் வரலாற்றில் இல்லை. அவை அனைத்தும் கல்கியால் உருவாக்கப்பட்டவை. பல்லவராயன் குடும்பத்தைச் சேர்ந்த வந்தியத்தேவன் என்பவர் குந்தவையை மணந்தார் என்பது வரலாற்று ரீதியாக நாம் அறிந்ததே. மேலும், ஆதித்த கரிகாலனும் குந்தவையும் ராஜராஜனின் மூத்த உடன்பிறப்புகள். ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் இறந்ததால் ராஜராஜன் அரியணைக்கு வந்தான். அவர் தனது சகோதரியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் அவளுடைய அறிவுரைகளைக் கேட்டார். ஆனால், மீதியெல்லாம் கல்கியின் படைப்பு. படத்தில் வரலாற்று துல்லியத்தை தேடி குழப்பிக்கொள்ள மாட்டேன்” என்று வரலாற்றாசிரியர் வி. ஸ்ரீராம் கூறினார்.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக, பலர் பொன்னியின் செல்வன் - 1-ஐ பிரபல தொலைக்காட்சி தொடரான ​​கேம் ஆஃப் த்ரான்ஸ் தமிழ் வடிவம் என்று வர்ணித்தனர். ஆனால், தமிழ் நாவலுக்கான உண்மையான உத்வேகம் 19 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையது என்று வி. ஸ்ரீராம் கருதுகிறார். பொன்னியின் செல்வன் மற்றும் அலெக்சாண்டர் டுமாஸின் மூன்று மஸ்கெட்டீர்ஸ் இடையே (Alexandre Dumas's The Three Musketeers) இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவலை உருவாக்குவதில் கல்கி தெளிவாக ஈர்க்கப்பட்டார்” என்று அவர் மேலும் கூறினார்.

பொன்னியின் செல்வன் - 1 திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து ஒருமனதாக சாதகமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களின் கற்பனையையும் ஈர்த்துள்ளது. ஸ்ரீராம் உட்பட அனைவரும் படத்தின் சிறப்பான உருவாக்கத்தில் ஈர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சோழப் பேரரசின் 10 ஆம் நூற்றாண்டை மீண்டும் உருவாக்குவதில் சில குறைபாடுகள் இருப்பதை வி.ஸ்ரீராம் கவனித்துள்ளார். வரலாற்றுக் கட்டமைப்புகள் உட்பட தயாரிப்பு வடிவமைப்பில் உள்ள தொடர்ச்சியான குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

“நகைகள், ஆடை மற்றும் பின்னணி ஆகியவற்றில் முகலாயர் காலத்து பொருட்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் குழப்பமாக இருந்தது” என்று வி. ஸ்ரீராம் குறிப்பிட்டார். அவர் சினிமா தயாரிப்பு வடிவமைப்பில் வெளிப்படையான மேற்பார்வைகள் இல்லை என நிராகரித்தார். இது அவரது அற்புதமான திரைப்படம் பார்க்கும் அனுபவத்தில் குறுக்கிடுகிறது என்று கூறினார்.

“சராசரி பார்வையாளர்கள் இதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, ராஜராஜன் காலத்தில் வளைவுகள் இல்லை. மேலும், இருபுறமும் தாமரையுடன் கோட்டைகளுக்கு நுழைவாயில்களைப் பயன்படுத்தியுள்ளனர். துருக்கிய சுல்தான்கள் இங்கு வந்த பிறகுதான் அந்த வடிவமைப்பு இந்தியாவில் நுழைந்தது. குவிமாடங்களும் இல்லை. அவர் (மணிரத்னம்) குவாலியர் மற்றும் ஓர்ச்சாவில் முழுமையாக படமாக்கியுள்ளார். இரண்டும் முகலாயர் காலத்துக்குப் பிந்தைய நினைவுச் சின்னங்கள். தஞ்சாவூர் ஆற்றங்கரையில் சமவெளிப் பிரதேசம் என்பதால் மலையின் உச்சியில் தஞ்சாவூர் கோட்டையைக் காண்பிப்பது பயங்கர முரனானது. பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் நகைகளை கழற்றும்போது, ​​அதன் அருகாமையில் உள்ளது. நிறைய நகைகளில் முகலாய மற்றும் வட இந்திய தாக்கம் இருப்பதை நீங்கள் காணலாம்” என்று வி.ஸ்ரீராம் சுட்டிக்காட்டினார்.

திரைப்பட இயக்குனர்களின் படைப்புச் சுதந்திரம் அவை என்பதை அவர் புரிந்துகொண்டாலும், திரைப்படத்தில் தமிழ் மொழியை மோசமாகப் பயன்படுத்தியதை அவராலேயே ஜீரணிக்க முடியாது. “மொழி படைப்பு சுதந்திரம் அல்ல. தமிழை தவறாக உச்சரிக்க மக்களை அனுமதித்தது மிகவும் அலட்சியமானது. இது நவீன படமாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், நீங்கள் சோழர்களுடன் பழகும்போது, ​​உண்மையில் தமிழ் தானே இருந்தது. மக்கள் நல்ல தமிழ் பேசுவார்கள் என்று நீங்கள் கருதுவீர்கள்” என்று அவர் புகார் கூறினார்.

இருப்பினும், இந்த படத்தின் தயாரிப்பில் குறைபாடுகள் இருந்தபோதிலும், பொன்னியின் செல்வன் - 1 ஒரு திரைப்படமாக அருமையாக இருந்தது என்று உணர்ந்ததால் மீண்டும் இந்த திரைப்படத்தைப் பார்ப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேரமின்மை காரணமாக, மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து சில அன்பான கதாபாத்திரங்களை வெட்டிவிட்டார். ஆனால், அவர் கல்கியின் பார்வைக்கு விசுவாசமாக இருந்தார் என்பது மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

“இந்தப் படம் வெற்றியடையும் என்று நம்புகிறேன், அதன்பிறகு தமிழர்களின் வரலாற்றைப் பற்றிய திரைப்படங்களை எடுக்க அதிக தயாரிப்பாளர்கள் யோசிப்பார்கள். தமிழர்கள் என்றால் அவர்கள் சோழர்கள் மட்டும் இல்லை. அவர்களுக்கு சமமாக பாண்டிய மன்னர்கள் செய்திருக்கிறார்கள். பல்லவ மன்னர்கள் நிறைய செய்தார்கள். கேரளாவில் சேர மன்னர்கள் நிறைய செய்துள்ளார்கள். இது போன்ற படங்கள் தென்னிந்தியாவின் வரலாற்றை முன்னிலைப்படுத்தி பிரபலப்படுத்துகின்றன” என்று நடிகரும் திரைப்பட வரலாற்றாசிரியருமான மோகன் ராமன் கூறினார்.

தற்காலத் தமிழ்த் திரைப்படங்களில் பாண்டியர்கள் கச்சாவாக கையாளப்படுகிறார்கள். அதே சமயம் சோழர்கள் எல்லாம் நல்லவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, இயக்குனர் செல்வராகவனின் 2010-ம் ஆண்டு வெளியான கற்பனை கதையான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில், கார்த்தி நடித்திருந்தார். அது பாண்டியர்களை மோசமான வெளிச்சத்தில் காட்டியது. அது ஏன் என்று யோசிக்காமல் இருக்க முடியாது?

“சோழர்களைப் பற்றிய அதிகபட்சமான தகவல்கள் நம்மிடம் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மிகப்பெரிய பேரரசாக இருந்தனர். அவர்கள் மிக நீண்ட காலமாக இருந்தனர். சோழர்களுக்கு முன் ஆண்ட பல்லவர்கள் பற்றிய போதுமான தகவல்கள் நம்மிடம் உள்ளன. பாண்டியர்கள் பற்றி தகவல்கள் இன்னும் குறைவாக உள்ளன, சேரர்கள் பற்றி ஒன்றும் இல்லை. இது கிடைக்கக்கூடிய தகவல்களின் வரிசைப்படி திரைப்படங்களும் கிடைக்கக்கூடியதைச் செய்கின்றன. அவை சரியாக ஆய்வு செய்யப்படவில்லை” என்று வி. ஸ்ரீராம் விளக்கினார்.

சோழப் பேரரசின் பிரதம மந்திரியான அனிருத்த பிரம்மராயர் வேடத்தில் நடித்த மோகன் ராமன், கல்கியின் பொன்னியின் செல்வனை மறந்துவிட்டு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 1-ஐ எந்த முன் முடிவுகளும் இன்றி ரசிக்குமாறு பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

“இந்தப் படத்துக்கு இரண்டு விதமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். முதல் வகையினர் நாவலைப் படித்தவர்கள், இரண்டாவது நாவலைப் படிக்காதவர்கள். நாவலைப் படிக்காத பார்வையாளர்களுக்கு, இந்தப் படம் மிகவும் புத்திசாலித்தனமான, கோபமூட்டும், கண்ணை உறுத்தும் அனுபவமாக இருக்கும். நாவலைப் படித்தவர்கள் நாவலைப் பற்றிய அவர்களின் பார்வையால் வழிநடத்தப்படுவார்கள். பொன்னியின் செல்வன் நாவல் வாரந்தோறும் தொடராக எழுதப்பட்டது. கல்கி ஒரு மெகா தொடரை எழுதினார். ஒவ்வொரு வாரமும் ஒரு குன்றின் மீது கதையை முடித்தார். மூன்று மணி நேர படத்திற்கு 22 கிளைமாக்ஸ்கள் தேவையில்லை. திரைக்கதையின் தேவைக்காக நிறைய காட்சிகளை ட்ரிம் செய்ய வேண்டியிருந்தது. நாவலைப் படித்த பார்வையாளர்கள், தங்களுக்குப் பிடித்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை” என்கிறார் மோகன் ராமன்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Maniratnam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment