/indian-express-tamil/media/media_files/2025/09/22/balti-2025-09-22-21-43-23.jpg)
வாரிசு நடிகராக என்ட்ரி ஆன சாந்தனு பாக்யராஜ் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க, பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும நிலையில், அடுத்து அவர் நடிப்பில் தமிழ மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் பல்டி என்ற படத்தின் ரிலீஸ்காக தயாராகி வருகிறார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ். தனது சிறப்பான திரைக்கதையின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்து இயக்குனர் மற்றும் நடிகராக முத்திரை பதித்த பாக்யராஜ், சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் தனது மகன் சாந்தனுவை நாயகனாக அறிமுகப்படுத்தினார். ஆனாலும தற்போதுவரை அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. கடைசியாக வெளியான ராவணக்கோட்டம் திரைப்படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இதனிடையே சாந்தனு பாக்யராஜ் அடுத்து தனது பல்டி படத்தின் வெளியீ்ட்டுக்காக தயாராகி வருகிறார். சமீபத்திய ஒரு நேர்காணலில், படத்திற்கான தனது தீவிர கபடி பயிற்சி, சினிமாவில் தனக்கான முன்றே்றம் குறித்து பேசியுள்ளார். கலாட்டா பிளஸுக்கு அளித்த பேட்டியில், சாந்தனு, “கபடி பயிற்சியில் மூழ்குவதற்கு தயாரிப்பாளர்கள் எங்களுக்கு அளித்த நேரத்திற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். வழக்கமாக, படங்களில் விளையாட்டு பயிற்சிக்கு எங்களுக்கு 3 மாதங்கள் கிடைக்கும், ஆனால் இங்கே எங்களுக்கு அதிகமாக வழங்கப்பட்டது.
பயிற்சியைத் தொடங்க அவர்கள் எங்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பே கொடுத்தார்கள். முதல் மாதத்தில் எங்களுக்கு ஸ்டண்ட் பயிற்சி வழங்கப்பட்டது, மேலும் தொழில்முறை பயிற்சியாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பாலக்காட்டில் தொழில்முறை கபடி வீரர்களால் நாங்கள் தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி பெற்றோம். எங்கள் பயிற்சியாளர்கள் தினமும் 20 நிமிடங்கள் ப்ரோ-கபடி போட்டிகளைக் காட்டினர். அதிலிருந்து, கபடி விளையாடுவதற்கான சிறிய விதிகள், பாணிகளை நாங்கள் அறிந்துகொண்டோம், அதை நாங்கள் பயன்படுத்த முடிந்தது.
படத்தில் சண்டையிடும்போது எங்கள் ஒவ்வொரு கேரக்டருக்கும் சக்தி வாய்ந்த அசைவுகள் உள்ளன, மேலும் இந்தப் பயிற்சி, ஸ்டண்ட் பயிற்சியுடன் சேர்ந்து, படத்தை திடடமிட்டபடி எடுக்க எங்களுக்கு உதவியது. பயிற்சியின்போது நிறைய காயங்கள் மற்றும் வலிகள் இருந்தன, ஆனால் நாங்கள் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியபோது, அவை அனைத்தும் பலனளித்தன. விளையாட்டில் எங்கள் சில அசைவுகளாவது திரையில் உண்மையானதாகத் தோன்றும் என்று நம்புகிறேன்.
நேர்காணலின் போது, சாந்தனு பாக்யராஜிடம் மற்ற மொழி திரைப்படத் துறைகளில் பணியாற்றுவதற்கான அவரது விருப்பம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர். அதைச் செய்ய எனக்கு வெவ்வேறு தொழில்களில் தொடர்புகள் இல்லை. நான் எப்போதும் சாந்தனுவாக மட்டுமே இருக்க முயற்சித்தேன். இந்தியில் அனில் கபூர் சார் போன்ற ஒருவரைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால், அதை எனக்காகச் செய்யும்படி என் அப்பாவிடம் (பாக்யராஜ்) கேட்க வேண்டும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை. இந்த பி.ஆர் விஷயத்திலும் நான் எதையும் முயற்சிக்கவில்லை.
நான் எப்போதும் நான் செய்யும் வேலையை அடிப்படையாகக் கொண்டு வாய்ப்புகளைப் பெற விரும்பினேன். யாராவது ஒருவருக்கு முன்பாகச் சென்று என் வேலையைக் காட்ட முடியும், அதுவே பேசட்டும். மலையாள சினிமாவில் பல்டியை எனது ரீ-என்ட்ரியாக நான் பார்க்கிறேன். ஷேன் நிகம் போன்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு நட்சத்திரம் தலைமையிலான ஒரு படத்தில் இவ்வளவு சிறந்த தயாரிப்புக் குழுவுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம். படத்தில் எனது கேரக்டருக்கு நல்ல ஸ்கோப் உள்ளது, அதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. இதைத்தான் நான் நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்தேன்.
மோகன்லால் நடித்த ஏஞ்சல் ஜான் (2009) படத்தின் மூலம் சாந்தனு பாக்யராஜ் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். செல்வராகவன் மற்றும் அல்போன்ஸ் புத்ரன் ஆகியோரும் நடிக்கும் பல்டி செப்டம்பர் 26 அன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் திரைக்கு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.