/tamil-ie/media/media_files/uploads/2020/05/New-Project-2020-05-19T153258.535.jpg)
களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. விமல், ஓவியா, சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பொதுமக்கள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதில் ஹீரோயினாக நடித்த ஓவியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து படங்களில் நடித்த அவர் விஜய் டி.வியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் அவரது இயப்பான பேச்சு, செயல்கள் மக்களிடையே படு ஃபேமஸ் ஆனார். ஓவியா ஆர்மி என ரசிகர்கள் இவருக்கு குவிந்தனர். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர் ஆரவ்வுடன் ஓவியா நெருங்கி பழகி வந்தார். இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அதைப் பற்றி இருவரும் எதுவும் சொல்லவில்லை. அந்த சீசனில் ஆர்வ் வெற்றி பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில படங்களில் மட்டுமே நடத்தார். காஞ்சனா 3, 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஓவியா, என்னைப் பலர் காதலித்து ஏமாற்றினார்கள். அதுமட்டுமல்லாமல் சிலர் பண விஷயத்திலும் என்னை ஏமாற்றினார்கள்" என்று வேதனையுடன் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us