Advertisment

அழகான மொரிஷியஸ் கடற்கரையில்... தனியாக அமர்ந்திருக்கும் இளையராஜா: வைரல் போட்டோ

இசைஞானி இளையராஜா மொரிஷியசில் கடற்கரையோரம் ஒரு காட்டேஜ் நிழற்குடையின் கீழ் தனிமையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Ialiayaraaja mori

அழகான மொரிஷியஸ் கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் இளையராஜா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00



இசைஞானி இளையராஜா மொரிஷியசில் கடற்கரையோரம் ஒரு காட்டேஜ் நிழற்குடையின் கீழ் தனிமையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தனது இசையால் கட்டிப்போட்டு வைத்து தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார் இசைஞானி இளையராஜா. அதே நேரத்தில், ரசிகர்களின் பாராட்டுதல்களைத் தவிர, அவருக்கு உரிய அங்கீகாரமும் விருதுகளும் கிடைத்துவிட்டதா என்றால், சற்று அது விவாதத்துக்குரியதுதான். ஆனாலும், இளையராஜா விருதுகளைப் பற்றியோ அங்கீகாரங்களைப் பற்றியோ அவர் பொருட்படுத்தியதே இல்லை.

இளையராஜா ரசிகர்களால் போற்றப்படுகிற அளவுக்கு விமர்சிக்கவும் படுகிறார். இளையராஜா 80-களில் 90-களில் இசையமைத்த ஹிட் பாடல்கள், இன்றும் புதிய படங்களில் பயன்படுத்தப்பட்டு அந்த படங்கள் ஹிட் அடிக்கின்றன. அதற்கு சிறந்த உதாரணம், மஞ்சுமெல் பாய் திரைப்படத்தைக் கூறலாம். இப்போதும் 2கே கிஸ்ட்களால் அதிகம் ரசிக்கப்படும் பாடல்கள் இளையராஜாவின் பாடல்கள்தான். 

அதே நேரத்தில், இளையராஜாவைப் பற்றிய சர்ச்சைகளும் சுற்றி வருகின்றனர். இசைஞானி தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கோருகிறார். வெளிநாடுகளில் இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைத்த பாடலகளுக்கு காப்புரிமை கோரும்போது, இளையராஜாவும் காப்புரிமை கோருகிறார். 

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சேர்ந்து பணிபுரியாமல் பிரிந்திருக்கும் இசைஞானி இளையராஜா - கவிஞர் வைரமுத்து இருவருக்கும் இடையே பூசல்களும் எழுந்துள்ளன. அண்மையில், ஆடியோ வெளியீட்டில் பேசிய கவிஞர் வைரமுத்து, “பாடல் வரிகள் பெரியதா? பாடலின் இசை பெரியதா? என்கிற கேள்வி தற்போது தமிழ் சினிமாவையே ஆட்டி படைத்து வருகிறது எனக் கூறிய வைரமுத்து மொழியும், இசையும் கலந்தது தான் ஒரு சிறந்த பாடல். சில நேரங்களில் மொழி இசையை விட பெரியதாக இருக்கும். சில நேரங்களில் மொழியை விட இசை பெரியதாக இருக்கும். இதை அறிந்தவன் ஞானி, அறியாதவன் அஞ்ஞானி” எனக் கூறி மறைமுகமாக இசைஞானி இளையராஜாவை விமர்சித்தார்.

கவிஞர் வைரமுத்துவின் பேச்சைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இசை பெரியதா மொழி பெரியதா என்ற விவாதங்கள் எழுந்தன. மேலும், இது வைரமுத்து வாசகர்கள் ஆதரவாளர்கள் மற்றும் இளையராஜா ரசிகர்கள் மோதாலாகவும் மாறியது.

இதனிடையே,ரஜினியின் 'கூலி' பட டீசரில் தன் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

இந்நிலையில், கோடையை கொண்டாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா மொரீஷியஸ் தீவுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் இளையராஜா வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ilaiyaraaja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment