கர்நாடக கோவிலுக்கு வைர கிரீடம், தங்க வாளை... கோடிக் கணக்கில் இளையராஜா அன்பளிப்பு!

கர்நாடகா மூகாம்பிகை கோவிலுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள வைர கிரீடம், தங்க வாள் மற்றும் நகைகளை காணிக்கையாக இளையராஜா வழங்கினார்.

கர்நாடகா மூகாம்பிகை கோவிலுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள வைர கிரீடம், தங்க வாள் மற்றும் நகைகளை காணிக்கையாக இளையராஜா வழங்கினார்.

author-image
WebDesk
New Update
ilayaraja

புகைப்படம்: எக்ஸ்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த நகைகளை காணிக்கையாக வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தனது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவுடன் உடுப்பியில் உள்ள  புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு வருகை தந்த இளையராஜா, அம்மனுக்கு இரண்டு வைர கிரீடங்கள், ஒரு நெக்லஸ், மற்றும் வீரபத்ர சுவாமிக்கு ஒரு தங்க வாள் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினார்.

Advertisment

ilayaraja

இந்தியாவின் இசை உலகை தன்பால் ஈர்த்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இளையராஜா. அவரது இந்த காணிக்கை, இசை உலகில் அவர் பெற்ற உச்சபட்ச வெற்றியைப் போலவே, ஆன்மிகத்திலும் அவருக்குள்ள ஆழமான ஈடுபாட்டைக் காட்டுகிறது. கோவில் வட்டாரங்களின் கூற்றுப்படி, இந்த காணிக்கைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 கோடி இருக்கும்.

மூகாம்பிகா கோவிலுக்கு வைர கிரீடம், வைர நெக்லஸ், தங்க வாள் ஆகியவற்றை இசையமைப்பாளர் இளையராஜா அர்ப்பணித்துள்ளார். இளையராஜா கொல்லூர் மூகாம்பிகா தேவி மற்றும் வீரபத்ர சுவாமி ஆகியோருக்கு ரூ. 8 கோடி மதிப்புள்ள தங்க முகம் மற்றும் வைரங்களுடன் கூடிய வாளை பரிசளித்தார். புதன்கிழமை காலை, இளையராஜா கோவிலுக்கு சென்று பூசாரிகள் முன்னிலையில் கோயிலுக்கு நகைகளை வழங்கினார். இளையராஜாவுடன் அவரது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா இருந்தார்.

இளையராஜாவின் இசை எப்படி லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோ, அதேபோல், அவர் வழங்கிய இந்த காணிக்கை அம்மனின் அருளைப் பெறும் பக்தர்களுக்கும், கோவிலின் வளர்ச்சிக்கும் பயன்படும்.  

Advertisment
Advertisements
Isaignani Ilayaraja Ilayaraja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: