Advertisment

'மகளை இழந்த காரணத்தால் கொண்டாட்டம் இல்லை': பிறந்தநாளில் இளையராஜா உருக்கம்

'மகளை இழந்த காரணத்தால் கொண்டாட்டம் இல்லை': பிறந்தநாளில் இளையராஜா உருக்கம்.

author-image
WebDesk
New Update
Bhavatharini Ilayaraja
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இசைஞானி இளையராஜா இன்று (ஜுன் 2) தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு வாழ்த்து தெரிவிக்க கோடம்பாக்கம் உள்ள அவரது ஸ்டூடியோவில்  ரசிகர்கள் காலையிலேயே குவிந்தனர். இந்நிலையில், தனது பிறந்தநாளை ஒட்டி, இசைஞானி இளையராஜா கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  இன்று எனது பிறந்தநாள் என்பதால் நீங்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறீர்கள். ஆனால் அதே நேரத்தில் எனது மகளை இழந்த துக்கத்தில் நான் இருப்பதால், இன்று நான் பிறந்த நாளை கொண்டாடவில்லை’ என்று உருக்கமாக கூறினார். 

Advertisment

முன்னதாக, இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவரது  வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் நடிக்கும் தனுஷ் அது தொடர்பான போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலம் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 25-ம் தேதி  சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார். இது இளையராஜாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.  பவதாரணி சிறந்த பின்னணி பாடகி ஆவார். அவரது தனித்துவமான குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இன்றும் உள்ளனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Isaignani Ilayaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment