'அடிக்கடி மேடையில் கண்கலங்க இதுதான் காரணம்’: வைரல் வீடியோவிற்கு சமந்தா விளக்கம்

விசாகப்பட்டிணத்தில் நடந்த 'சுபம்' படம் புரோமோஷன் நிகழ்ச்சியில் கண்களை சமந்தா அடிக்கடி துடைத்துக் கொண்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மகிழ்ச்சியில் கண் கலங்கினாரா (அ) வேறு ஏதாவது சோகமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

விசாகப்பட்டிணத்தில் நடந்த 'சுபம்' படம் புரோமோஷன் நிகழ்ச்சியில் கண்களை சமந்தா அடிக்கடி துடைத்துக் கொண்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மகிழ்ச்சியில் கண் கலங்கினாரா (அ) வேறு ஏதாவது சோகமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samantha crying

நான் எமோஷனலாக காரணமே இதுதான்? - வைரல் வீடியோவிற்கு சமந்தா விளக்கம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான சமந்தா, அதனை தொடர்ந்து தெலுங்கு, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். 2023-ம் ஆண்டு "திரலாலா மூவிங் பிக்சர்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சமந்தா, அந்த நிறுவனத்தின் மூலம் 'சுபம்' என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் 9-ந் தேதி வெளியாக உள்ளது. தற்போது அந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

Advertisment

சமீபத்தில், விசாகப்பட்டினத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைசமந்தா மேடையில் கண்கலங்கியிருந்தார். இதற்கு முன்பும் பல மேடைகளில் இதேபோல் சமந்தா கண்கள் கலங்கிய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. இந்நிலையில் , அடிக்கடி இவ்வாறு நடப்பது ஏன்? என்பதற்கு சமந்தா விளக்கமளித்துள்ளார்.

இதனை தெளிவு படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்டுள்ளார் அதில் " நேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. விசாகப்பட்டின மக்களுக்கு நன்றி. நீங்கள் என்மீது காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. நான் கண்கலங்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. நான் ஏற்கனவே பல இடத்தில் கூறியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் கூறுகிறேன், என் கண்கள் மிகவும் சென்சிட்டிவானது.

அதாவது, "அடிக்கடி நான் மேடையில் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனல் கிடையாது. பிரகாசமான விளக்குகளை பார்க்கும்போது என் கண்கள் கூசுவதால், இயற்கையாகவே எனக்கு கண்ணீர் வருகிறது. அதனாலே நான் அடிக்கடி கண்களை துடைக்கிறேன். நான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு அழவில்லை. நான் அழுவதாக பலர் வதந்திகளை பரப்புகின்றனர். நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும், நலமுடன் உள்ளேன்" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

சில வருடங்களுக்கு முன்பு சமந்தாவிற்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வந்தது. அதனால், சினிமாவில் நடிப்பதை சிறிது காலம் தவிர்த்திருந்தார். பின்னர் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சைகளை மேற்கொண்டார். தற்போது அதிக வெளிச்சத்தால் அவரது கண்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actress Samantha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: