Advertisment

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரம் : கோவை வந்தடைந்த துணை ராணுவ வீரர்கள்

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என பணிகளை துவங்கியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Army In tamilnadu
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை 

Advertisment

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 3" கம்பெனி துணை இராணுவத்தினர் கோவை இரயில் நிலையம் வந்திறங்கினர். மாநகர தேர்தல் பிரிவு காவல்துறையினர் அவர்களை வரவேற்றனர்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என பணிகளை துவங்கியுள்ளனர். இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து கோவை மாநகரம், திருப்பூர், மற்றும் நீலகிரி பகுதிகளுக்காக 3 கம்பெனி துணை இராணுவத்தினர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேரளாவில் இருந்து கொச்சுவேலி விரைவு ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்த 276 துணை இராணுவ வீரர்களை கோவை மாநகர தேர்தல் பிரிவு போலீஸார் வரவேற்றனர். பின்னர் காவல் துறை பேருந்துகள் மூலம் துணை இராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கோவை மாநகர் மற்றும் திருப்பூர், நீலகிரியில் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Parliament Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment